புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 பிப்., 2014

ஜெனிவாவில் வெற்றி பெற மந்திர தந்திரம் செய்யும் இலங்கை
ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட உள்ள பிரேரணையை தோற்கடிக்கும் நோக்கில், ராஜபக்ஷ அரசாங்க மந்திர தந்திர முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக அரச வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளத்தில் அடித்துச் செல்லும் மனிதன் புல்லை பிடித்தாவது உயிர் தப்பிக்க முயற்சிப்பது போல், ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் கொண்டு வரும் பிரேரணையை மந்திரீக சக்தி பயன்படுத்தியாவது தோற்கடிக்க வேண்டும் என மகிந்த ராஜபக்ஷ நகைப்புக்குரிய முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகிறது.
இதன் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக கொட்டகலையில் நாளைய தினம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளும் மகா யாகம் ஒன்றை நடத்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் நடவடிக்கை எடுத்தள்ளார்.
இந்த யாகத்தை நடத்துவதற்காக அமைச்சர் தொண்டமானுக்கு மிக நெருக்கமான ஹதராபாத்தை சேர்ந்த ரூபா மாகாந்தி ராம் மோகன் என்பவர், கேரளாவை சேர்ந்த 9 மந்திரவாதிகளை இலங்கைக்கு அனுப்பியுள்ளார்.
கேரள மந்திரவாதிகள் நடத்தும் ஜெனிவா பிரேரணையில் இருந்து தப்பிக்கும் இந்த யாகம் கொட்டகலையில் உள்ள அமைச்சர் ஆறுமுகன் தொண்டமனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நாளைய தினம் நடைபெறவுள்ளது.
இதனை தவிர அடுத்த மாதம் முழுவதும் இலங்கைக்கு எதிரான ஏகாதிபத்திய சதித்திட்டத்தை தோற்கடிக்கும் பூஜை வழிப்பாடுகள் இலங்கையில் ஆலயங்களில் நடத்தப்பட உள்ளன.
அத்துடன் ஜனாதிபதியின் மனதை வென்றெடுப்பதற்காக அவருக்கு நெருக்கமான அமைச்சர்கள் தமது வீடுகளில் யாகங்களையும் ஹோமங்களையும் நடத்த உள்ளனர்.

ad

ad