புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 பிப்., 2014

அப்சல் குரு விவகாரத்தில் விமர்சித்த பாஜக, ராஜீவ் கொலை வழக்கு தீர்ப்பில் மட்டும் மவுனமாக இருப்பது ஏன்?: கபில் சிபில்

அப்சல் குரு விவகாரத்தில விமர்சித்த பாஜக ராஜீவ் கொலை வழக்கு தீர்ப்பில் மட்டும் மவுனத்தை கடைபிடிப்பது ஏன் என்று மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபில் கேள்வி எழுப்பியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் ராஜீவ் காந்தி கொலையில் ஈடுபட்டவர்களுக்கு எவ்வித சலுகையும் அளிக்கப்படக் கூடாது என்று அட்டர்னி ஜெனரல் வாதிட்டிருந்தார். ஆனால் தற்போது நீதிமன்றம்  தீர்ப்பை அறிவித்துள்ளது. இதில் விருப்பம் உள்ளளேதா இல்லையே நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து நடந்தாக வேண்டும். ஆகவே மத்திய அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து நடக்கும்.
தீவிரவாதிகளுக்கு இதுபோன்ற தீர்ப்புகள் சாதகமாகி விடக்கூடாது. நான் இதை யாருக்கும் எதிராக சொல்லவில்லை. அப்சல் குரு தூக்கிலிடப்பட வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வந்த பாரதிய ஜனதா, ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து எவ்வித கருத்தும் கூறவில்லை.
 அப்சல் குரு தூக்கு தண்டனை நிறைவேற்ற காலம் தாழ்த்தப்பட்டபோது அரசு தீவிரவாதத்தை ஒடுக்குவதில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என விமர்சனம் செய்த பா.ஜ.க. இப்போது ராஜீவ் கொலை வழக்கு தீர்ப்பில் மட்டும் மவுனத்தை கடைபிடிப்பது ஏன்?  இவ்வாறு கபில் சிபில் கூறியுள்ளார்.

ad

ad