புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 பிப்., 2014


அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும்: தமிழ் மாநில முஸ்லீம் லீக்

தமிழ் மாநில முஸ்லீம் லீக்கின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் எஸ்.ஷேக்தாவூத் தலைமை தாங்கினார்.



மாநில இளைஞர் அணி தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, தலைமை நிர்வாகி கே.ஜாகிர் உசேன், மத்திய சென்னை மாவட்ட தலைவர் என்.அக்பர், தலைமை நிலைய செயலாளர்கள் கே.அக்பால், ஏ.அஸ்மத்துல்லா, மாநில இளைஞர் அணி இணை தலைவர் எம்.எப்.இம்ரான், மாநில அமைப்பு செயலாளர் பி.முகமது அஜிம் ஆகியோர் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
*பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை தொடர்ந்து ஆதரிக்க இந்த செயற்குழு கூட்டம் தீர்மானிக்கிறது.
*இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
*கட்சத்தீவை இந்தியாவுடன் இணைத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும்.
*அனைத்து சமுதாய மக்களுக்காகவும் தமிழ் மாநில முஸ்லீம் லீக் தொடர்ந்து பாடுபடும்.
*போர்க்குற்றவாளி ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டும்.
உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த தகவல் தமிழ் மாநில முஸ்லீம் லீக் தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

ad

ad