புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 பிப்., 2014

யாழில் உள்ள மசாஜ் நிலையங்கள் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் தீவிர கண்காணிப்பு; எஸ்.எஸ்.பி 
யாழ்.மாவட்டத்தில் விபச்சாரத்தினை ஊக்குவிக்கும் முகமாக செயற்பட்டு வரும் மசாஜ் நிலையங்கள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.பிராந்திய சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் டவுள்யூ.பி.விமலசேன தெரிவித்தார்.


யாழ்.பொலிஸ் நிலையத்தில் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று இடம்பெற்றது. அதன்போது கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்தினை அண்மித்து இருக்கும் விடுதியில் மசாஜ் நிலையம் ஒன்று இயங்கி வருகின்றது என்றும் அங்கு விபச்சாரத்தினை ஊக்குவிக்கும் முகமான செயற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.

அதன்படி இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரின் நடவடிக்கை என்ன என்று கேள்வியெழுப்பி இருந்தனர். அதற்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

விபச்சார நடவடிக்கையில் ஈடுபடும் விடுதிகள் தொடர்பில் சட்டநடவடிக்கை எடுப்பதற்கு புலனாய்வு பிரிவினரால் விபரங்கள் சேகரிப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாணத்தின் கலாசாரத்தினை நாங்கள் அறிவோம். எனவே விபச்சாரத்தினை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு இடமளிக்கும் விடுதிகள் தொடர்ந்தும் புலனாய்வு பிரிவினரால் கண்காணிக்கப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றது.

எனவே சேகரிக்கப்படும் தகவல்கள் உறுதிப்படுத்தும் நிலையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றார்.

ad

ad