புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 பிப்., 2014


மன்னித்துவிடுங்கள் : ராகுல் காந்தியிடம் நளினியின் மகள் கோரிக்கை
ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்று தமிழ்நாடு
அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது.


ஆனால்,  மத்திய அரசு இதற்கு இடைக்கால தடை வாங்கியுள்ளது.  இந்நிலையில், மன்னித்துவிடுங்கள் என்று நளினி-முருகனின் தம்பதியின் மகளான அரித்ரா ஸ்ரீஹகரன் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
லண்டனியில் உள்ள அரித்ரா,  தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் “ராகுல் காந்தியிடம் மிகவும் வருந்தி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனது பெற்றோர்கள் மன்னிக்கப்பட போதுமான தகுதி கொண்டுள்ளனர். நீங்கள் விரும்பிய ஒருவரின் இழப்பு என்னால் புரிந்துக் கொள்ள முடியும்.
அத்தகைய தண்டனையால் நான் பாதிக்கப்பட்டேன். நான் எனது பெற்றோர்களுடன் இருக்க விரும்புகிறேன்.  எனது பெற்றோர்கள் உயிருடன் உள்ளனர்.  இருந்தும் அவர்களுடன் நான் இருந்ததில்லை.  அவர்கள் குற்றம் செய்து இருந்தாலும் அதற்கான தண்டனையை போதுமான அளவு அனுபவித்துவிட்டனர்.” என்று கூறியுள்ளார்.

ad

ad