புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 பிப்., 2014

கூட்டமைப்பின் வலுவான குழுவை ஜெனிவாவுக்கு அனுப்ப வேண்டும் – வலியுறுத்துகிறார் ஆனந்தசங்கரி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலுவானதொரு குழுவை ஜெனிவாவுக்கு அனுப்ப வேண்டும் என்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்
ஆனந்தசங்கரி, கோரிக்கை விடுத்துள்ளார்.

அப்பாவித் தமிழ் மக்களை பிறர் ஏமாற்றுவதை அனுமதிக்காமல் இருப்பதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலுவான குழுவொன்றை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடருக்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரியான வழியில் அதன் கடமையை செய்வதற்கு, ஜெனிவாவுக்கு வலுவான குழுவொன்றை அனுப்ப வேண்டும் என்றும் தாம் இப்போது உணர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad