புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 பிப்., 2014

சர்வதேசத்திற்கு விலை போகும் விக்னேஸ்வரனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அரசாங்கத்தின் மீதும், இராணுவத்தின் மீதுமே தனிப்பட்ட கோபம் உள்ளது. அரசாங்கத்திற்கும் கூட்டமைப்பினருக்கும் இடையே உள்ள
விரோதத்தினால் முழு நாட்டையும் பழிவாங்கிவிடக்கூடாது.

இன்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஆகியோர் சர்வதேசத்தின் கையாளாகவே செயற்படுகின்றனர்.

அரசாங்கத்திற்கும், முழு நாட்டிற்கும் எதிராக சர்வதேசத்தினையே திருப்பி, தேசத்துரோகத்தில் ஈடுபட்டுவரும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்ததுடன்,

அதேபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தடை செய்து அவர்களின் செயற்பாட்டினையும் தடை செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாண சபைத் தேர்தலின் பின்னர் வட மாகாண சபைக்கும், முதலமைச்சருக்கும் போதுமான அளவு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

வடக்கின் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடிந்தும் அவர்கள் அவை எவற்றினையும் விரும்பவில்லை என்பதுவே உண்மை. அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களையும் தடுத்து அவர்களின் சுய விருப்பங்களுக்காக வடக்கு மக்களை பயன்படுத்துகின்றனர் என்பதே உண்மை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், விக்னேஸ்வரனும் சேர்ந்து மக்கள் மனதில் பிரிவினை வாதத்தினை தூண்டுகின்றனர். வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ் மக்களிடையே ஓர் விதத்திலும், அரசாங்கத்திடம் இன்னோர் விதத்திலும் சர்வதேசத்திடம் வேறொரு விதமாகவும் கருத்துக்களை முன்வைக்கின்றார் என அவர் சுட்டிக்காடினார்.

நாட்டை பிரித்து  வடக்கினை தனி அரசாக மாற்றி தனி ஆட்சி நடத்தவே இவர்கள் அனைவரும் முயற்சிக்கின்றனர். ஜெனிவா தீர்மானம் கொண்டு வரவும் கூட்டமைப்பே காரணம் என  அவர் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad