புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 பிப்., 2014

சிவனுக்கு பூஜை செய்வதாக கூறி மூன்று பெண்களை துஷ்பிரயோகம் செய்த பிக்கு
சிவனுக்கு பூஜை செய்வதாக கூறி இரண்டு பெண்கள் மற்றும் இளம் யுவதியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பௌத்த பிக்கு ஒருவரை தம்மகல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள பிக்கு, பல குற்றச் செயல்கள் சம்பந்தமாக தெய்யத்தகண்டிய, கடுகன்னாவ, பண்டாரவளை பொலிஸ் நிலையங்களால் தேடப்பட்டு வந்த நபர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவரை குணப்படுத்த அவரது மனைவி இந்த பிக்குவை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மாந்திரீகத்தின் மூலம் நோய்களை குணப்படுத்துபவர் என பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற இந்த பிக்கு, கணவனைக்கான பூஜைகளுக்கு முன்னர், மனைவி சார்பில் சிவ கடவுளுக்கு பூஜை செய்ய வேண்டும் எனக் கூறி, அறை ஒன்றுக்குள் அழைத்துச் சென்று, அந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பூஜை வழிப்பாடுகளை பார்ப்பதற்காக வந்த கர்ப்பிணி பெண்ணொருவரையும் இந்த பிக்கு பாலியல் வலற்வுக்கு உட்படுத்தியுள்ளதுடன் அன்றைய தினம் மாலை 15 வயதான இளம் யுவதியையும் வீட்டுக்கு வெளியில் அழைத்துச் சென்று வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.
சந்தேக நபரான பிக்கு மீண்டும் வீட்டில் இருந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக தம்பகல்ல பொலிஸார் கூறினர்.
இது சிவனுக்கு செய்த பூஜை என குறித்த பிக்கு, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பெண்களிடம் கூறியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ad

ad