புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2014

இலங்கையை அடியோடு கைவிட்டது இந்திய அரசு; பீரிஸிடம் குர்த் நேரில் தெரிவிப்பு 
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள பிரேரணையைத் தோற்கடிக்க எந்த வகையிலும் உதவ முடியாது என்று இந்தியா கைவிரித்துள்ளது. 

 
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதாலேயே, தமிழர்களின் உணர்வுகளைக் காயப்படுத்த விரும்பாத இந்திய மத்திய அரசு, இலங்கைக்கு உதவ மறுத்துள்ளது என "எக்கணமிக் ரைம்ஸ்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
 
கடந்த புதன்கிழமை புது டில்லியில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தை, இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் சந்தித்துப் பேசியிருந்தார்.
 
இதன்போது, ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணையில் அனைத்துலக விசாரணை கோரப்படாது என்பதை உறுதிப்படுத்துவதற்கு பிரதமர் மன்மோகன் சிங்தலைமையிலான அரசு உதவ வேண்டும் என்று பீரிஸ் கோரியிருந்தார் என இந்திய வெளிவகார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
தேர்தல் மனோநிலையில் இருந்த சல்மான் குர்ஷித், இதற்கு எந்த வாக்குறுதியையும் கொடுக்கவில்லை என்று இந்திய வெளிவிவகார என்றும் அந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 
அதேவேளை, வொஷிங்டனுடனேயே இதுபற்றி நேரடியாகப் பேசிக் கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சர் பீரிசுக்கு, சல்மான் குர்ஷித் ஆலோசனை கூறியுள்ளார். 
 
அத்துடன், இந்தத் தீர்மானம் தொடர்பாக புதுடெல்லி சரியான நேரத்தில் முடிவெடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். 
 
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இன்னமும் தமிழ்நாட்டில் எந்தக் கூட்டணியையும் அமைக்கவில்லை. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் நிலையில், இந்த நேரத்தில் கொழும்புக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தால், தமிழ்நாட்டில் கூட்டணி அமைப்பதில் காங்கிரஸுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்பதாலேயே இலங்கையுடன் மோதல் போக்கை கடைப்பிடிப்பதாகவும் எக்கொனமிக் ரைம்ஸ் தெரிவித்துள்ளது.
 
இதேவேளை, இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், கொழும்புடன் நட்புடன் இருப்பதற்கும் டில்லி  விரும்புவதாகவும் அந்தச் செய்தில கூறப்பட்டுள்ளது. 

ad

ad