வடக்கு மாகாண சபையின் புதிய பிரதம செயலாளராக பத்திநாதர் நியமனம்! விஜயலட்சுமி இடமாற்றம்
செயலாளராகக் கடமையாற்றி வருகின்ற திருமதி விஜயலட்சுமி ரமேஷ் நீக்கப்படவுள்ளார் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வடக்கு மாகாண சபையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் கடமையைப் பொறுப்பேற்று நான்கு
மாதங்கள் முடிவடைந்த நிலையிலும் பல்வேறு நிர்வாகச் சிக்கல்கள் காணப்படுவதாகவும் பிரதம செயலாளரை இடமாற்ற வேண்டுமென பகிரங்கமாகச் சபையினர் கோரிக்கை விடுத்துள்ளமையினாலும் இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாதங்கள் முடிவடைந்த நிலையிலும் பல்வேறு நிர்வாகச் சிக்கல்கள் காணப்படுவதாகவும் பிரதம செயலாளரை இடமாற்ற வேண்டுமென பகிரங்கமாகச் சபையினர் கோரிக்கை விடுத்துள்ளமையினாலும் இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய தற்பொழுது மொனராகலை மாவட்டத்தின் அரசாங்க அதிபராகக் கடமையாற்றி வருகின்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரான ஏ.பத்திநாதர் வடக்கின் பிரதம செயலாளராக நியமிக்கப்படவுள்ளார்.
இவருடைய இடத்திற்கு வடமாகாண ஆளுநரின் செயலாளராக தற்பொழுது கடமையாற்றி வருகின்ற இளங்கோவன் நியமிக்கப்படலாம் எனவும் தற்பொழுது பிரதம செயலாளராக திருமதி விஜயலட்சுமி ரமேஷிற்கு பணி இடமாற்றம் வழங்கப்படலாம் எனவும் விடயமறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு, வடமாகாண ஆளுநரின் செயலகம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஆகியன ஏற்பாடு செய்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை, வடமாகாண ஆளுநரின் செயலாளராக தற்பொழுது கடமையாற்றி வருகின்ற இளங்கோவனை யாழ்ப்பாணத்திற்கான அரச அதிபராக நியமிப்பதற்கும் மற்றொரு அணி முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும் இது குறித்து உறுதிப்படுத்த முடியவில்லை.