புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2014


போஸ்டரால்தான் இவ்வளவு பிரச்னையும்;முதலில் என்ஆதரவாளர்கள் அதை நிறுத்த வேண்டும்: அழகிரி
 


17.3.2014 இன்று மதுரை தயா திருமண மண்டபத்தில் தி.மு.க.வின் தென் மண்டல அமைப்புச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி
ஆலோசனைக்கூட்டத்தை கூட்டியுள்ளார். 


இந்த ஆலோசனைக்கூட்டத்தில் ,  மதுரை, தேனி, திண்டுக்கல்,விருதுநகர், சிவகங்கை மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.  அடுத்து என்ன முடிவெடுப்பது என்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.


இக்கூட்டத்தில் பேசிய அழகிரி,   ’’தொண்டர்கள் என் மீதான பாசத்தால் போஸ்டர்கள் அடித்து ஒட்டுவதுதான் இப்போது ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு காரணம்.  போஸ்டரால்தான் இவ்வளவு பிரச்னையும். முதலில் என் ஆதரவாளர்கள் போஸ்டர் அடித்து ஒட்டுவதை நிறுத்த வேண்டும். அதனால்தான் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் நடப்பதே இந்தப் போஸ்டர் பிரச்னையால்தான்.  எனவே இதனை முதலில் நிறுத்தணும்.
என் மீதான அன்பின் காரணமாக போஸ்டர் அடித்து ஒட்டுகிறீர்கள். ஆனால், இதனை அங்கே அருகில் இருக்கும் நபர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
எனது பிறந்த நாள் ஒரு பொதுக்குழுக் கூட்டத்தை போல் நடக்கும் என்று போஸ்டர் ஒட்டியிருந்தார்கள். அதை ஒரு விமர்சனமாக எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். கட்சிக்குள் நிலவும் பிரச்னையை சரி செய்ய முன்வந்திருக்க வேண்டும். ஆனால், அதை பெரிய பிரச்னையாக எடுத்துக் கொண்டு இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்கிறார்கள்’’ என்று வேதனையை தெரிவித்தார்.
அவஎ மேலும்,   ‘’ஏற்கெனவே கலைஞர் திமுக..தான் உள்ளது. அப்படி இருக்கும்போது, நாம் ஏன் புதிதாக கலைஞர் திமுக என்ற புதிய கட்சியைத் தொடங்க வேண்டும்’’ என்று ஆதரவாளர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார் அழகிரி.

ad

ad