புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மார்., 2014

காதலுக்கு எதிர்ப்பு: செஞ்சியில் காதலர்கள் தற்கொலை!
செஞ்சி அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து காதலனும் தூக்குப்போட்டு தற்கொலை
செய்து கொண்டார்.


செஞ்சி அருகே கம்பந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் காசிலிங்கம் மகள் சித்ரா(வயது 17) இவர் தையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவரும், அதே கிராமத்தை சேர்ந்த அய்யாசாமி மகன் கிருஷ்ணமூர்த்தி(25) (இவர் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார்.) இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்தது. இதற்கு இரு குடும்பத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந் நிலையில் கிருஷ்ணமூர்த்திக்கு திருமணம் செய்து வைப்பதற்காக, வேறு ஒரு பெண்ணை பெற்றோர் பார்த்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த சித்ரா கடந்த 20-ம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.  அப்போது வீட்டிற்கு வந்த அவரது பெற்றோர், சித்ரா மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அவரை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 26-ம்தேதி  சித்ரா இறந்தார்.
இது குறித்து தகவலறிந்த கிருஷ்ணமூர்த்தி தனது காதலி தன்னை விட்டு சென்று விட்டாளே என்ற துக்கத்தில் , கம்பந்தூர் கிராமத்தை சேர்ந்த சுப்புராயன் என்பவரது விவசாய நிலத்தில் உள்ள மாமரத்தில் கயிற்றில் தூக்குப்போட்டு அதே நாளில் தற்கொலை செய்து கொண்டார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து செஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் மருது மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கிருஷ்ணமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

ad

ad