புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2014

இந்தியாவின் சுழல் பந்தில் தோற்றது பாகிஸ்தான் 

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்–10 சுற்றில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி பாகிஸ்தானை தோற்கடித்தது.
சூப்பர்–10 சுற்று தொடக்கம்

5–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. தகுதி சுற்று முடிந்து நேற்று ‘சூப்பர்–10’ எனப்படும் பிரதான சுற்று போட்டிகள் தொடங்கின. சூப்பர்–10 சுற்றில் விளையாடும் 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி குரூப்1–ல் தென்ஆப்பிரிக்கா, இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து, நெதர்லாந்து அணிகளும், குரூப்2–ல் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேச அணிகளும் அங்கம் வகிக்கின்றன.
இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைக்கும்.
இந்த நிலையில் சூப்பர்–10 சுற்றின் முதல் ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மிர்புர் ஸ்டேடியத்தில் நேற்றிரவு சந்தித்தன. இந்திய அணியில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜாவுடன், 3–வது சுழற்பந்து வீச்சாளராக அமித் மிஸ்ராவும் சேர்க்கப்பட்டதால், ரஹானேவுக்கு இடம் கிடைக்கவில்லை. டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் டோனி தயக்கமின்றி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது.
பாகிஸ்தான் 130 ரன்
மிர்புர் சுழன்று திரும்பக்கூடிய மெதுவான (ஸ்லோ) ஆடுகளம் என்பதால் இந்திய கேப்டன் டோனி சுழற்பந்து வீச்சாளர்களை அதிகமாக பயன்படுத்தினார். அதற்கு கைமேல் பலன் கிடைத்தது.
பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் கம்ரன் அக்மல் 8 ரன்னில் தேவையில்லாமல் ரன்–அவுட் ஆனார். அடுத்து இறங்கிய கேப்டன் முகமது ஹபீஸ் 5 ரன்னில் இருந்த போது கேட்ச் வாய்ப்பில் இருந்து (விட்டவர் யுவராஜ்சிங்) தப்பித்தார். ஆனாலும் நீண்ட நேரம் நீடிக்காத அவர் ஜடேஜாவின் சுழலில் சிக்கி 15 ரன்களில் வெளியேற்றப்பட்டார்.
இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை சமாளித்து பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களால் அதிரடியாக ரன் சேகரிக்க இயலவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்த அதே வேளையில், அவர்களின் ரன் வேகமும் சராசரிக்கும் குறைவாகவே நகர்ந்து கொண்டிருந்தது. ஏறக்குறைய முதல் ஓவரில் இருந்து கடைசி வரை எதிரணியின் கை ஓங்க விடாமல் இந்திய கேப்டன் டோனி கவனித்துக் கொண்டார். நிர்ணயிக்கப்பட்ட  20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்கு 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக உமர் அக்மல் 33 ரன்களும் (30 பந்து, 2 பவுண்டரி), எதிர்பார்க்கப்பட்ட அப்ரிடி 8 ரன்னும் (10 பந்து) எடுத்தனர்.
பாகிஸ்தானை கட்டுப்படுத்திய இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா கூட்டணியாக 12 ஓவர்களில் 63 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்ததுடன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
தவான் 30 ரன்
பின்னர் 131 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்த ரோகித் ஷர்மாவும், ஷிகர் தவானும் முதல் 3 ஓவர்களில் (7 ரன்) நிதானம் காட்டினர். ஜூனைட் கானின் 4–வது ஓவரில் ரோகித் ஷர்மா பவுண்டரியும், சிக்சரும் விளாச, சயீத் அஜ்மலின் அடுத்த ஓவரில் தவான் 3 பவுண்டரிகளை விளாசி ஸ்கோரை உயர்த்தினர்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்து நல்ல அடித்தளம் அமைத்து தந்தது. தவான் 30 ரன்னிலும் (28 பந்து, 5 பவுண்டரி), ரோகித் ஷர்மா 24 ரன்னிலும் (21 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த யுவராஜ்சிங் (1 ரன்) கிளீன் போல்டு ஆகி ஏமாற்றம் அளித்தார்.
இந்தியா வெற்றி
இதையடுத்து துணை கேப்டன் விராட் கோலியும், சுரேஷ் ரெய்னாவும் ஜோடி சேர்ந்தனர். ரெய்னா 7 ரன்னில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை, முதலாவது ஸ்லிப்பில் நின்ற அப்ரிடி வீணடித்தார். இல்லாவிட்டால் இந்தியாவுக்கு மேலும் நெருக்கடி உருவாகியிருக்கும்.
சிறிய இலக்கு என்பதால் கோலியும், ரெய்னாவும் பதற்றமின்றி ஏதுவான பந்துகளை மட்டும் எல்லைக்கோட்டிற்கு ஓட விட்டனர். நேர்த்தியாக ஆடிய இந்த ஜோடியை பாகிஸ்தான் பவுலர்களால் பிரிக்க முடியவில்லை. 19–வது ஓவரில் ரெய்னா, சிக்சரும், அதைத் தொடர்ந்து ஒரு ரன்னும் எடுத்து ஆட்டத்தை தித்திப்பாக நிறைவு செய்தார்.
இந்திய அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கோலி 36 ரன்களுடனும் (32 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), ரெய்னா 35 ரன்களுடனும் (28 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர். சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
பெருமை தொடருகிறது
இதன் மூலம் உலக கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானிடம் ஒரு போதும் தோற்றதில்லை என்ற பெருமையை இந்தியா தக்க வைத்துக் கொண்டது. 20 ஓவர் உலக கோப்பையில் இந்தியாவிடம் பாகிஸ்தான் அணி மண்ணை கவ்வுவது இது 4–வது முறையாகும்.
இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை நாளை (ஞாயிற்றுக்கிழமை) எதிர்கொள்கிறது.
ஸ்கோர் போர்டு
பாகிஸ்தான்
கம்ரன் அக்மல்(ரன்–அவுட்)    8
அகமது ஷேசாத் (ஸ்டம்பிங்)             டோனி (பி) மிஸ்ரா 22
ஹபீஸ் (சி) புவனேஷ்வர்குமார்
    (பி) ஜடேஜா 15
உமர் அக்மல்(சி) ரெய்னா
    (பி) ஷமி 33
சோயிப் மாலிக் (சி) ரெய்னா
    (பி) மிஸ்ரா 18
அப்ரிடி (சி) ரெய்னா (பி)
    புவனேஷ்வர்குமார் 8
சோகைப் மசூத்(ரன்–அவுட்) 21
பிலாவல் பாத்தி(நாட்–அவுட்) 0
எக்ஸ்டிரா    5
மொத்தம் (20 ஓவர்களில்
    7 விக்கெட்டுக்கு) 130
விக்கெட் வீழ்ச்சி: 1–9, 2–44, 3–47, 4–97, 5–103, 6–114, 7–130
பந்து வீச்சு விவரம்
அஸ்வின்    4–0–23–0
புவனேஷ்வர்குமார்    3–0–21–1
முகமது ஷமி    4–0–31–1
அமித் மிஸ்ரா    4–1–22–2
ஜடேஜா    4–0–18–1
யுவராஜ்சிங்.    1–0–13–0
இந்தியா
ரோகித் ஷர்மா(பி)அஜ்மல்    24
தவான் (சி) அஜ்மல் (பி)
    உமர்குல் 30
கோலி (நாட்–அவுட்)    36
யுவராஜ்சிங் (பி)
    பிலாவல் பாத்தி 1
ரெய்னா (நாட்–அவுட்)    35
எக்ஸ்டிரா    5
மொத்தம் (18.3 ஓவர்களில்
     3 விக்கெட்டுக்கு) 131
விக்கெட் வீழ்ச்சி: 1–54, 2–64, 3–65
பந்து வீச்சு விவரம்
முகமது ஹபீஸ்    3–0–14–0
ஜூனைட் கான்    3–0–23–0
சயீத் அஜ்மல்    4–0–18–1
உமர்குல்    3.3–0–35–1
அப்ரிடி    3–0–24–0
பிலாவல் பாத்தி    2–0–17–1
கேப்டன்கள் கருத்து
சில கேட்ச்சுகளை நழுவ விட்டதுடன், 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டதாக பாகிஸ்தான் கேப்டன் முகமது ஹபீஸ் கூறினார். ‘சில கேட்ச்சுகளை தவற விட்டோம். மற்றபடி இந்த ஆட்டம் அருமையாக அமைந்தது’ என்று இந்திய கேப்டன் டோனி குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

ad

ad