புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2014

பழனி அருகே கள்ளக்காதலன்-கள்ளக்காதலி வெட்டிக்கொலை;ரூ 23 லட்சத்துடன் மகளை கடத்திய டிரைவர்

பழனி பாலாறு, பொருந்தலாறு அணை அருகே தோட்டத்து பண்ணை வீட்டில் வசித்து தனுஷ் என்ற 40 வயது பெண் தனது மகள் துளசி சியாமளா(13) வுடன் வசித்து வந்தார். இவரது கணவர் 
நாராஅனசாமி சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார் இதனால் இவர்கள் தனியாக இருந்து வந்தனர்.
தனுசின் உறவினரான செந்தில்குமார்(40) என்பவர் இவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்று தோட்டத்து வரவு செலவு கணக்கை பார்த்து வந்தார். அப்போது செந்தில்குமாருக்கும், தனுசுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
செந்தில்குமாருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இருந்தபோதும் தனுஷ் வசதியுடன் இருப்பதால் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனுசை 2-வது திருமணம் செய்ய முயற்சி செய்தார்.
தனுஷ் வீட்டில் வெள்ளகோவில் அருகில் உள்ள முத்தூரை சேர்ந்த காளீஸ்வரன்(35) என்பவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் தினசரி துளசிசியாமளாவை காரில் பள்ளிக்கு கொண்டுவிடுவதும், மீண்டும் மாலையில் அழைத்து வருவதும், இதர நேரங்களில் வீட்டு வேலைகளுக்கு உதவியாக இருந்துள்ளார்.
 காளீஸ்வரனுக்கு தனுசின் கள்ளக்காதல் எரிச்சலை நேற்றிரவு மாலையில் வேலை முடிந்ததும் வீட்டிற்கு செல்வதாக காளீஸ்வரன் கூறிச்சென்றார். அதன்பிறகு இரவு வீட்டிற்கு வந்த காளீஸ்வரன் அங்கு கட்டிலில் தனுசும், செந்தில்குமாரும் அரைகுறை ஆடைகளுடன் படுத்திருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் ஆத்திரம் தலைக்கேறிய நிலையில் அரிவாளால் தனுசை சரமாரியாக வெட்டினார். செந்தில்குமாரையும், வெட்டி சாய்த்தார்.
ரத்த வெள்ளத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே பிணமானார்கள். அதன்பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்த காளீஸ்வரன் வீட்டு பீரோவில் இருந்த ரூ.23 லட்சம் பணத்தை ஒரு பேக்கில் எடுத்துக்கொண்டார். மற்றொரு அறையில் தூங்கிக்கொண்டிருந்த துளசிசியாமளாவை தூக்கிக்கொண்டு காரில் படுக்க வைத்தார். அதன்பிறகு காருடன் மாயமானார். இதுகுறித்து  பழனி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 

ad

ad