புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மார்., 2014

 இந்தியக்கடலில்விழுந்து23000அடிஆழத்தில்சென்று மூழ்கியமலேசியவிமானத்தை கண்டுபிடித்து மீட்க முடியுமா என்ற கருத்து நிலவுகின்றது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங் நகருக்கு கடந்த 8ம் திகதி 239 பயணிகளுடன் மலேசிய ஏயார்லைன்ஸ் விமானம் புறப்பட்டுச் சென்றது.

அது புறப்பட்டு 2 மணி நேரத்தில் தென் சீனக் கடலுக்கு மேலே பறந்தபோது, நடு வானில் மாயமானது. விமானக் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. மாயமான விமானத்தை இந்திய, அமெரிக்கா உட்பட 26 நாடுகள் தீவிரமாகத் தேடி வந்தன.
போர்க் கப்பல்கள் மற்றும் விமானங்கள் தேடுதல் நடத்தின. ஆனால், விமானம் குறித்த தகவல்கள் எதுவம் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், இங்கிலாந்து செயற்கைக்கோள் நிறுவனம் மற்றும் விமான விபத்து புலனாய்வு அமைப்பு அளித்த தகவலின் படி, 17 நாட்களுக்குப் பிறது அந்த விமானம் குறித்த தகவல் உறுதி செய்யப்பட்டது.
அதன்படி, தெற்கு இந்தியப் பெருங்கடலில், அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து சமார் 2500 கிலோ மீற்றர் தூரத்தில் குறித்த விமானம் கடலுக்குள் நொறுங்கி விழுந்ததாக மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக் நேற்று அதிகார பூர்வமாக அறிவித்தார்.
இதன்மூலம் மாயமான விமானம் குறித்த தகவல் 17 நாட்களுக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்துள்ளது. தற்போது, அடுத்த கட்ட நடவடிக்கையாக கடலில் மூழ்கிக் கிடக்கும் விமானத்தை மீட்பது குறித்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகின்றது.
கடலில் மூழ்கிக் கிடக்கும் விமானத்தின் கருப்புப் பெட்டியை மீட்கும் நடவடிக்கையில் அமெரிக்க கடற்படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஏனெனில் அதற்கான தொழில் நுட்பத்துடன் கூடிய கருவி அமெரிக்காவிடம் தான் உள்ளது.
அந்தக் கருவியின் உதவியால் தான் விமானத்தின் உடைந்த பாகங்களை எளிதில் கண்டு பிடிக்க முடியம் என பென்டகன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உடைந்த பாகங்கள் இருக்கும் இடம் தெரியும் பட்சத்தில் இதில் இருந்து வெளிவரும் சமிக்ஞைகள் உதவியுடன், கருப்பு பெட்டியை மீட்க முடியும் என்று அமெரிக்காவின் 7வது கப்பல்படை அதிகாரி கிறிஸ்புட்டே நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இப்பணியில் நன்கு பயிற்சி பெற்ற வீரர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர். கருப்பு பெட்டியின் பட்டரி தற்போது, செயல்பட்டு வருகிறது. அதன் மூலம் கருப்பு பெட்டியைக் கண்டு பிடிக்க முடியம் என்று அவர் தெரிவித்தார்.
இவ்வாறு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ad

ad