புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மார்., 2014

கொழும்பின் சில திகுதிகளில் மனோ கணேசனின் ஜனநாயக மக்கள்  முன்னணி பலம் மிக்க சிங்கள கட்சிகளோடு சேர்ந்து 3 ஆம் அல்லது 4 ஆம் இடங்களைகைப்ப்ற்றி உள்ளது 
சில தேர்தல் தொகுதிகளில் ஆளும் கட்சி வெற்றியீட்டிய போதிலும்,  கொழும்பு மாவட்டத்திய முக்கிய தொகுதிகளில் ஆளும் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சி பின்தள்ளியுள்ளது.

மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயகக் கட்சி மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகளினது வாக்குகளும் அதிகரித்துள்ளன.
தெஹிவளை, இரத்மலானை, கொலன்னாவை, அவிசாவலை, கடுவல, கோட்டே, மஹரகம, மொரட்டுவ, ஹோமாகம ஆகிய தொகுதிகளில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு முன்னணி வகிக்கின்றது.
எனினும், கொழும்பு மத்தி,  பொரளை, கொழும்பு மேற்கு,  கொழும்பு கிழக்கு மற்றும் கொழும்பு வடக்கு ஆகிய தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி முன்னணி வகிக்கின்றது.
கொழும்பில் பொன்சேகாவுக்கு 3 ஆசனங்கள்
மேல் மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின் படி கொழும்பு மாவட்டத்தில் மொத்தமுள்ள 39 ஆசனங்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 18 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 12 ஆசனங்களையும் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி மூன்று ஆசனங்களையும் ஜே.வி.பி மூன்று ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.
அத்துடன் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி கொழும்பு மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தை மட்டுமே கைப்பற்றியது.

ad

ad