புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மார்., 2014

இறந்துபோன மனைவியின் காலடியில் விழுந்து கணவன் மரணம்
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகேயுள்ள ஒட்டப்பட்டியைச் சேர்ந்தவர் வேடியப்பன் (வயது-50). இவரது மனைவி சரஸ்வதி (வயது-45). சரஸ்வதிக்கு  கடந்த மூன்று ஆண்டுகளாக புற்று நோய் தாக்குதலுக்கு
உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்தார். நோய் முற்றிய நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்டு, அவதியுற்று வந்த அவருக்கு மருத்துவமனையில் தங்கவைத்து சிகிச்சை கொடுத்து வந்துள்ளார் வேடியப்பன்.


இந்த நிலையில், சரஸ்வதி நேற்று (திங்கள்கிழமை) காலை இறந்தார். தொடர்ந்து, கணவர் வேடியப்பன், மனைவிக்கு குளிப்பாட்டி, வீட்டுக்குள் கொண்டுவந்து படிக்கவைத்து உடலை அலங்கரித்து மனைவியின் இறந்துபோன உடலுக்கு பாத பூஜை செய்து சூடம் ஏற்றி வணங்கிவிட்டு மனைவி காலடியில் விழுந்து அவரும் இறந்தார்.


இந்தத் தம்பதிக்கு திருமணமாகி 27 ஆண்டுகளாகின்றன. இவர்களது மகள் தேவி (வயது-26), மகன் கார்த்திக் (வயது-23) என இரு குழந்தைகள் உள்ளனர்.  இணைபிரியாத இந்தத் தம்பதியினர் ஒரேநாளில் இறந்ததால், அந்தக் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

ad

ad