புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2014

தனிக்கட்சி தொடங்குவதா? :5 மாவட்ட ஆதரவாளர்களுடன் அழகிரி ஆலோசனை
தி.மு.க.வின் தென் மண்டல அமைப்புச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி எம்.பி. சமீபத்தில் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதிலிருந்து
தி.மு.க.வில் சலசலப்புகள் உருவாகி உள்ளது. மு.க.அழகிரியின் அதிரடி பேட்டிகளும், அவரது ஆதரவாளர்களின் போஸ்டர்களும் பரபரப்பை ஏற்படுத்தியே வருகின்றன.


உச்சக்கட்டமாக மு.க.அழகிரி, தனிக்கட்சி தொடங்குவார் என்ற பேச்சு எழுந்தபோது, அதனை அவர் மறுத்தார். ஆனால் கடந்த சில நாட்களாக பிரதமர் மன்மோகன் சிங், பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங், வைகோ, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் மு.க.அழகிரி.
அவரது அடுத்தக்கட்ட திட்டம்தான் என்ன? என்பது மர்மமாக உள்ளது. வேறு கட்சிகளுக்கு ஆதரவு கொடுப்பாரா? போட்டி வேட்பாளர்களை நிறுத்துவாரா என பல கேள்விகள் அரசியல் களத்தில் எழுந்துள்ளன.
இந்நிலையில் , 17.3.2014 இன்று மதுரை தயா திருமண மண்டபத்தில் அழகிரி ஆலோசனைக்கூட்டத்தை கூட்டியுள்ளார். 
இந்த ஆலோசனைக்கூட்டத்தில் ,  மதுரை, தேனி, திண்டுக்கல்,விருதுநகர், சிவகங்கை மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.  அடுத்து என்ன முடிவெடுப்பது என்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.,

ad

ad