புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மார்., 2014

இதுவரை 60% மான வாக்குப்பதிவு
இன்று மாலை 4 மணியுடன் முடிவடைந்த மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலில் 60 வீத வாக்களிப்பு இடம் பெற்றுள்ளதாக நீதியானதும் சுதந்திரமான தேர்தலுக்கான மக்கள்
இயக்கத்தின்(கபே அமைப்பு) பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இது வரை நடைபெற்று வாக்களிப்பு வீதங்களின் படி  கொழும்பு மாவட்டத்தில் 30 %, கம்பகா  20%, களுத்துறை 40%, காலி மாவட்டத்தில் 40%, மாத்தறை 40%, அம்பாந்தோட்டையில் 48 வீதமான வாக்குகளும் பதிவாகியுள்ளன.
மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் வாக்குப் பதிவுகள் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.

இரண்டு மாகாண சபைகளுக்கும் 155 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக 4253 நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறுவதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தில் கொழும்பு,  கம்பஹா,  களுத்துறை  மாவட்டங்களில் இருந்து 40 இலட்சத்து, 24 ஆயிரத்து 424 வாக்காளார்களும் தென் மாகாண சபைக்கான தேர்தலில் காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் 18 இலட்சத்து 73 ஆயிரத்து 804 வாக்காளர்களும் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.

இரண்டு மாகாண சபைகளுக்குமான தேர்தலில் 81 அரசியற்கட்சிகளும், 42 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.

இந்த தேர்தலில் 3794 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கொழும்பு மாவட்டத்தில் ஆயிரத்து 247 வேட்பாளர்களும், கம்பஹாவில் 946 பேரும், களுத்துறையில் 550 பேரும் இம்முறைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

காலி மாவட்டத்தில் 450 வேட்பாளர்களும், மாத்தறையில் 380 பேரும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 221 பேரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இவர்களில் கொழும்பு மாவட்டத்திற்கு 40 பேரும், கம்பஹா மாவட்டத்திற்கு 40 பேரும், களுத்துறை மாவட்டத்திற்கு 22 பேருமாக மேல் மாகாண சபைக்கு  102 பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

காலி மாவட்டத்தில் 22 பேரும், மாத்தறையில் 17 பேரும், ஹம்பாந்தோட்டையில் 14 பேருமாக தென் மாகாண சபைக்கு  53 உறுப்பினர்கள் இன்றைய தேர்தலின் மூலம் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

இதுதவிர வாக்களித்த பின்னர் உடனடியாக வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள வளாகத்திலிருந்து வெளியேறி தேர்தலை அமைதியான முறையில் நடத்திமுடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தேர்தல்கள் செயலகம் வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதேவேளை, தேர்தல் முடிவுகள் தொகுதிவாரியாகவும், மாவட்ட ரீதியாகவும், வெளியிடப்படுமென மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்தார்.

தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியிடப்பட்டதன் பின்னரே, விருப்பு வாக்குகள் எண்ணப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் தபால்மூல வாக்களிப்பின் முதலாவது முடிவை இன்றிரவு 10 மணியளவில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்ட மேலதிக தேர்தல்கள் ஆணையாளர், முதலாவது உத்தியோகபூர்வ முடிவை இன்று நள்ளிரவு 12 மணியளவில் வெளியிட தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்

ad

ad