புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மார்., 2014

அமெரிக்க யோசனையின் இறுதியான வரைவு இது தான் .தமிழில் 
அமெரிக்க தீர்மான வரைவின் இறுதி வடிவத்தின் தமிழாக்கம் இங்கு முழுமையாக பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்பு கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்,
அனைத்து மனித உரிமைகள் மற்றும் அதன் முழு மக்கள் தொகையில் சகலரது அடிப்படை சுதந்திரங்களை உறுதிப்படுத்துவது ஒவ்வொரு நாடுகளினதும் பொறுப்பு.
பயங்கரவாதத்திற்கு எதிராக போரிட எடுக்கப்பட்ட எந்த நடவடிக்கைகளின் போதும், சர்வதேச சட்டம், குறிப்பாக சர்வதேச மனித உரிமைகள் சட்டம், சர்வதேச அகதிகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டம், என்பவற்றின் அடிப்படையில் நாடுகள் தமது கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
அமைதியான மற்றும் ஒன்றுபட்ட தேசத்தில், மதம், நம்பிக்கை அல்லது இன ரீதியான மனித உரிமைகள் உட்பட சகல மனித உரிமைகளுக்கும் இலங்கையில் மதிப்பளிக்கப்பட வேண்டும்.
சில விடயங்களில் இலங்கை கணிசமான அளவு முன்னேற்றமடைந்துள்ளது.
உட்கட்டமைப்பு, கண்ணி வெடி அகற்றுதல், இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுதல் உட்பட பெரும்பாலான நடவடிக்கையில் இலங்கை அரசு முன்னேற்றமடைந்துள்ளது.
எனினும் நல்லிணக்கம், நில பயன்பாடு மற்றும் உரிமை, பொதுமக்களின் வாழ்க்கையை சகஜ நிலையை மீண்டும் ஏற்படுத்துவது. இந்த முயற்சிகளுக்கு சிவில் சமூகம் மற்றும் சிறுபான்மை பிரதிநிதிகள் உட்பட உள்ளூர் மக்கள், முழு பங்கை வகிக்க வேண்டிய முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
21 செப்டம்பர் 2013 அன்று மாகாண சபை தேர்தல்களை நடத்தியது வரவேற்கப்பட வேண்டியது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை உயர் ஆணையர் வருகையை எளிதாக்கியமை மற்றும் திறந்த அணுகுமுறையை வழங்கி அவர் சுதந்திரமாக செயற்பட அனுமதித்தமை.
மற்றும் ஆகஸ்ட் 2013 ல் மனித உரிமை ஆணையாளரின் விஜயத்தை வரவேற்பதுடன் அவரது முயற்சிகள் மற்றும் இலங்கை அரசின் ஒத்துழைப்புகள் பாராட்டத்தக்கவை.
அவரது வருகையின் போது ஆணையாளரை சந்தித்து தகவல்களை வழங்கியவர்கள் உட்பட அவரை சந்தித்தவர்கள் உட்பட மனித உரிமைகள் வழிமுறைகளில் ஈடுபட்ட மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் எதிரான பதிலடி நடவடிக்கைள் ஆழமான கவலையை ஏற்படுத்தியுள்ளன.
பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகள், காணாமற்போதல், நீதிக்கு புறம்பான கொலைகள், சித்திரவதை மற்றும் கருத்து சுதந்திரம், ஒன்று கூடுதல் மற்றும் அமைதியான கூட்டங்களை நடத்தும் உரிமை, நீதித்துறை சுதந்திரத்தின் மீதான அச்சுறுத்தல்கள் உட்பட இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ந்து வரும் செய்திகள் தீவிர கவலை ஏற்படுத்தியுள்ளது.
சட்டத்தின் ஆட்சி, மற்றும் மனித உரிமைகள் பாதுகாவலர்களுக்கு எதிரான பழிவாங்கல், சிவில் சமூகத்தின் உறுப்பினர்கள், சட்டத்தரணிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் அடக்குமுறை.
இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உட்பட இலங்கையில் சிறுபான்மை மத குழுக்கள், உறுப்பினர்கள் மீது தாக்குதல்கள் குறிப்பிடத்தக்க எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளன.
நாட்டின் சகல மக்களுக்கான நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் முழு உறுதி செய்யும் ஒருங்கிணைந்த அரசியல் அதிகாரம், அதிகார பகிர்வுக்கு உட்பட , அதன் பொது உறுதிமொழிகளை இலங்கை அரசு வழங்க வேண்டும்.

, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க இலங்கை ஆணைக்குழு, அதன் கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகள் ஊடாக இலங்கை அர்த்தமுள்ள தேசிய நல்லிணக்க செயன்முறைகளில் அதன் சாத்தியம் பங்களிப்பு வழங்க வேண்டும்.
நம்பத்தகுந்த, சட்டத்துக்கு புறம்பான கொலைகள் மற்றும் காணாமல் போனவர்கள் பற்றிய குற்றச்சாட்டுக்கள் பரந்த அளவில் விசாரணைகளட நடத்தப்பட வேண்டும்.
இலங்கையின் வடக்கு இராணுவ பிரசன்னத்தை குறைத்தல், காணி பிரச்சினைகள் தொடர்பில் உரிய பாரபட்சமற்ற தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும்.
தடுப்பு கொள்கைகள், சுயாதீன சிவில் அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் உட்பட ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகளை, நினைவுகூர்ந்து மாகாணங்களுக்கு அதிகார பகிர்வு அரசியல் தீர்வு அடைய, மேம்படுத்த மற்றும் அனைத்து நபர்கள் கருத்து சுதந்திரம் உரிமை பாதுகாக்க சட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க இலங்கை அரசின் ஆணைக்குழு மற்றும் அதன் பொறுப்புகள் கண்டுபிடிப்புகள் மற்றும் ஆணைக்குழு பரிந்துரைகளை பதில் வரையறுக்கப்பட்டுள்ளவாறு பரிந்துரைகளை அமுல்படுத்த தேசிய நடவடிக்கை திட்டம் வகுக்கப்பட வேண்டும்.
தேசிய நடவடிக்கை திட்டம் போதுமான கண்டுபிடிப்புகள் மற்றும் ஆணைக்குழு ஆக்கபூர்வமான பரிந்துரைகளை அனைத்துக்கும் பதிலளிக்கும் வகையில், அறிக்கையில் அனைத்து கூறுகளையும் செயற்படுத்தும் திட்டத்தின் நோக்கம் விரிவுபடுத்த இலங்கை அரசுக்கு ஊக்கமளிக்கப்படுகிறது.
சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பாக கடுமையான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை பதிலளிக்காத பாரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தனிப்பட்ட வழக்குகள், இழப்பீட்டு தொகைகள், உண்மையை கண்டறியும், நிறுவன சீர்திருத்தம், பொது துறை ஊழியர்கள் உட்பட சட்ட மற்றும் நீதித்துறை சார்ந்த நடவடிக்கைகள், முழு வீச்சில் சேர்த்துக்கொள்வதன் இடைக்கால நீதிக்கான ஒரு விரிவான அணுகுமுறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வுகளையும் வழங்குதல் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவித்தல் , பாதுகாப்பு அமைப்புகளின் சுயாதீனமான செயற்பாடுகளை உறுதிப்படுத்துதல், அரச நிறுவனங்கள் நம்பிக்கையை கட்டியெழுப்புதல் மற்றும் ஏற்ப சட்டத்தின் ஆட்சி ஊக்குவிக்குவித்தல், சர்வதேச மனித உரிமைகள் சட்டம், மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை தடுத்தல்.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மூலம் அவ்வாறான கடந்த கால மனித உரிமை மீறல்கள் மற்றும் அவற்றிக்கான காரணங்கள் மற்றும் விளைவுகள் வடிவங்கள் குறித்து நீதித்துறை மூலமான விசாரணை நடத்தி உண்மையை தேடும் செயல்முறைகள் நிறைவு செய்யலாம் என வலியுறுத்தப்படுகிறது.
சர்வதேச சட்டத்தின் கீழ் குற்றங்களாகவுள்ள சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் பாரிய மீறல்கள் பொறுப்பானவர்கள் மீது குற்ற விசாரணை நடத்தும், நாடுகளின் பொறுப்பை நினைவுகூர்ந்துள்ளது.
மேலும் தேசிய பொறிமுறைகளை தொடர்ந்து உண்மையை நிறுவ மற்றும் நீதி நிறைவேற்ற தவறிவிட்டது என்ற மனித உரிமை ஆணையாளரின் முடிவு.
மற்றும் அவரது பரிந்துரையை மனித உரிமைகள் பேரவையின் சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறியமை தொடர்பில் விசாரிக்க ஒரு சர்வதேச விசாரணை பொறிமுறையை உருவாக்குதல்,
அப்படியான உள்நாட்டு ரீதியான பொறுப்பு கூறும் செயல்முறைகள் கண்காணிக்கவும் தொழில்நுட்ப உதவிகள் உள்ளிட்ட உதவிகளை பெற மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்துடன் ஒத்துழைப்பை அதிகரிக்க இலங்கை அரசுக்கு ஊக்கமளிக்கப்படுகிறது.

ad

ad