புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2014

தயாநிதிமாறன், ஆ.ராசா, கனிமொழி வேட்புமனுக்களை
தேர்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும்: பி.ஹெச்.பாண்டியன்
தயாநிதிமாறன், ஆ.ராசா ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்யும்போது அவற்றை தேர்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும் என்றார் அ.தி.மு.க. அமைப்புச்
செயலர் பி.ஹெச்.பாண்டியன்.


திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் இன்று  நடைபெற்ற அ.தி.மு.க. தேர்தல் அலுவலக திறப்பு விழா வில் அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும், ’’தி.மு.க. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள தயாநிதிமாறன், அ.ராசா மற்றும் மாநிலங் களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோரின் மீது குற்றஞ்சுமத்தப்பட்டு,  மக்களவைக் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அப்படியிருக்கையில் அந்தக் குழுவின் அறிக்கை, நீதிமன்ற உத்தரவுகளைப் போன்றதுதான். எனவே, தயாநிதிமாறன் மற்றும் ஆ.ராசா ஆகியோர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யும்போது அவர்களது மனுக்களை தேர்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும்’’ என்றார்.

ad

ad