புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மார்., 2014

தோல்வி பயத்தால் தேர்தலில் போட்டியிடாமல் ஓடி ஒளிகிறார் ப.சிதம்பரம்: பா.ஜனதா கிண்டல்
தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயம் காரணமாகவே நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஓடி ஒளிகிறார் என்று பா.ஜனதா கட்சி பரிகாசம் செய்துள்ளது. 


நேற்று அறிவிக்கப்பட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலில், ப.சிதம்பரம் பலமுறை போட்டியிட்ட சிவகங்கை தொகுதியில் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன்னதாகவே தாம் இனி தேர்தலில் போடியிடப்போவதில்லை என சிதம்பரம் அறிவித்திருந்ததோடு, தனது மகனுக்காக சிவகங்கை தொகுதியில் பிரசாரத்தையும் மேற்கொண்டார்.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டால் தோற்றுவிடுவோம் என்று தெரிந்து தோல்வி பயம் காரணமாகபோட்டியிடாமல் ப.சிதம்பரம் ஓடி ஒளிவதாக பா.ஜனதா கிண்டலடித்துள்ளது. 

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமன், இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சிக்கு நிதி அமைச்சர் ப.சிதம்பரமே காரணம் என்றும், ஒளிர்ந்த இந்தியாவை நிதியமைச்சர் சிதம்பரம் அஸ்தமனமாக்கிவிட்டதாகவும் கடுமையாக சாடினார்.

ad

ad