புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மார்., 2014


தென் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் போட்டியிட பிரபல நடிகைகள் தோல்வியடைந்துள்ளதாக தெரியவருகிறது.
அனார்கலி ஆகர்ஷா ஆளும் கட்சியின் சார்பிலும் நதீஷா ஹேமமாலி ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பிலும் தேர்தலில் போட்டியிட்டனர்.

மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்ட இவர்களில் நதீஷா ஹேமமாலி விருப்பு வாக்குகளின் அடிப்படையில் 5 ம் இடத்தில் உள்ளார்.
அந்த மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 4 ஆசனங்கள் மாத்திரமே கிடைத்தன.
அதேவேளை மாத்தறை மாவட்டத்தில் ஆளும் கட்சிக்கு 10 ஆசனங்கள் கிடைத்துள்ளன.
விருப்பு வாக்குகளின் அடிப்படையில் அனார்கலி 10 ம் இடத்திற்குள் இல்லை என கூறப்படுகிறது.
ஹிருணிக்கா முன்னிலையில்

களுத்துறை, கம்பஹா, கொழும்பு ஆகிய மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் போட்டியிட்ட  பிரசன்ன ரணதுங், ஹிருணிக்கா பிரேமச்சந்திர ஆகியோர் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ad

ad