புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2014

திமுகவின் நட்சத்திர அரசியல்வாதிகளில் முக்கியமானவராக இருந்த குஷ்பு, திமுகவை விட்டு விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

கடந்த 2010ஆம் ஆண்டில் திமுகவில் இணைந்த குஷ்பு, திமுகவின் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்தார். வரும் பாராளுமன்ற தேர்தலில் தென்சென்னை
தொகுதியில் போட்டியிட மனு செய்திருந்தார். ஆனால் சில மாதங்களுக்கு முன் ஸ்டாலின் குறித்த சர்ச்சைக்குரிய கருத்தை குஷ்பு தெரிவித்ததை மனதில் வைத்து குஷ்புவுக்கு தேர்தலில் நிற்க வாய்ப்பு கொடுக்க ஸ்டாலின் மறுத்துவிட்டார். இதனால் கடும் அதிருப்தியில் இருந்த குஷ்பு, பின்னர் மனதை தேற்றிக்கொண்டு திமுகவின் வெற்றிக்கு பிரச்சாரம் மட்டும் செய்யலாம் என்ற நிலைக்கு வந்துவிட்டார்.

ஆனால் இதுவரை திமுக தலைமையிடம் இருந்து குஷ்பு பிரச்சாரம் செய்வதற்கான முறையான அறிவிப்பு வராததால், கடும் அதிர்ச்சி அடைந்த குஷ்பு, அதிரடியாக கட்சியில் இருந்து விலக முடிவு செய்துவிட்டார். தற்போது டெல்லியில் இருக்கும் குஷ்பு, பாரதிய ஜனதா மேலிடத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தென்சென்னை தொகுதியை தனக்கு கொடுத்தால், பாரதிய ஜனதா கூட்டணிக்காக தமிழகம் முழுவதும் தீவிர சூறாவளிப்பிரச்சாரம் செய்யத்தயார் என்றும் மேலும் தனது சக நடிகையான நமீதாவையும் கட்சியில் இணைக்க தாம் உதவுவதாகவும் பேசி வருகிறார். 

அனேகமாக டெல்லியில் இருந்து திரும்பி வரும்போது தென்சென்னை தொகுதி வேட்பாளராகத்தான் வருவார் என கூறப்படுகிறது.

ad

ad