புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2014

மினி பேருந்தில் இலைகளை மறைக்க சொல்வது ஏன்: ஐகோர்ட் கேள்வி
மினி பேருந்தில் உள்ள இலைகளை மறைக்க உத்தரவிடுமாறு தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்திருந்தார். அவரது புகாரை பரிசீலித்த
தேர்தல் ஆணையம் மினி பேருந்தில் உள்ள இலைகளை மறைக்க உத்தரவிட்டது.


இதை எதிர்த்து அதிமுக பொதுசெயலாளரான ஜெயலலிதா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மூன்று மாதங்களாக பேருந்துகளில் இலைகள் உள்ளபோது தற்போது அதை மறைக்க சொல்வது ஏன் என தேர்தல் ஆணையத்துக்கு கேள்வியெழுப்பினார்.
பின்னர் இவ்வழக்கின் விசாரணையை வரும் 20-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

ad

ad