புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2014

காங்கிரஸ் மத்தியில் ஆண்டதால் தான் இலங்கையில் தமிழினம் மாண்டது:அ.தி.மு.க வேட்பாளர் வேணுகோபால் குற்றசாட்டு

மத்தியில் காங்கிரஸ் ஆண்ட காரணத்தால் தான் இலங்கையில் தமிழினம் மாண்டதாக கும்மிடிப்பூண்டி அடுத்த எல்லாபுரம் ஒன்றியம் செம்பேட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்
போது தற்போதைய எம்.பி-யும் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளருமான பி.வேணுகோபால் தெரிவித்தார்.
கும்மிடிப்பூண்டி அடுத்த எல்லாபுரம் ஒன்றியத்தை சேர்ந்த செம்பேடு, பாகல்மேடு, புன்னப்பாக்கம், தாமரைப்பாக்கம், கொமக்கம்பேடு, மாகரல், கொடுவெளி, பூச்சி அத்திப்பேடு, குருவாயல், கன்னிகாபுரம், ஆயலச்சேரி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த 30 கிராமப் பகுதியில் அ.தி.மு.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரத்திற்கு மாவட்ட ஊராட்சி தலைவர் பி.ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.
இந்த பிரச்சாரத்திற்கு ஒன்றிய குழு தலைவர் அம்மினி மகேந்திரன், துணை தலைவர் எஸ்.பாபு, மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் குழந்தைவேலு, ஊராட்சி மன்ற தலைவர் கோதண்டன், கவுன்சிலர் முருகன், நாகராஜ் முன்னிலை வகித்தனர்.
இந்த பிரச்சாரத்தின் போது நாடாளுமன்ற எம்.பி-யான அ.தி.மு.க வேட்பாளர் வேணுகோபாலோடு பூந்தமல்லி எம்.எல்.ஏ இரா.மணிமாறன் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.
செம்பேட்டில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது பேசிய வேட்பாளர் வேணுகோபால் மத்திய அரசு டீசல், பெட்ரோல் போன்றவற்றின் விலையை அடிக்கடி ஏற்றியதால் தான் தமிழத்தில் விலைவாசி அதிகரித்ததாகவும், மத்திய அரசின் ஏதேச்சதிகார போக்கின் காரணமாக தமிழக அரசுக்கு போதிய நிதி ஒதுக்கப்படாததோடு, ரயில்வே திட்டங்கள் உட்பட பல்வேறு திட்டங்களில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாகவும் தெரிவித்தவர், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி ஆண்ட ஒரே காரணத்தால் தான் இலங்கையில் தமிழினம் மாண்டதென்றும், காங்கிரஸ் ஆட்சியை மத்தியில் இருந்து அகற்றி மத்திய ஆட்சியில் அ.தி.மு.க அமரும் போது தமிழகத்தில் மட்டுமல்லாது உலக தமிழர்களின் நலனும் காக்கப்படும் என்றார்.
இந்த பிரச்சாரத்தின் போது தாமரைப்பாக்கத்தில் புரட்சி பாரதம் கட்சியின் ஒன்றிய  செயலாளர் ராள.ராமலிங்கம், ஒன்றிய தலைவர் ராள.கிருஷ்ணன்  தலைமையில் புரட்சி பாரதம் கட்சியினர் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தனர்.கூட்டத்தில் செம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் மேனகா தயாளன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை தலைவர் பாஸ்டர் தயாளன், மாகரல் ஊராட்சி மன்ற தலைவர் அப்பாதுரை உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

ad

ad