அண்ணே ஞாபகம் இருக்கா...? யாரும் மறக்கமாட்டாங்கண்ணே...: திருநாவுக்கரசரை அழைத்துச் சென்ற காங்கிரசார
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதியில் இணைக்ப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக திருநாவுக்கரசர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அறந்தாங்கி தொகுதியில் நன்கு அறிமுகமான திருநாவுக்கரசர் வியாழக்கிழமை அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோயிலில் தரிசனம் செய்து தனது முதல் பிரசாரத்தை தொடங்கினார்.
கோயில் வாசலில் அர்ச்சனை பொருட்கள் விற்கும் பெரியவிரிடம் சென்று, அண்ணே என்னை தெரியுதா... நான் தான் என்று திருநாவுக்கரசர் தொடங்கும் போது.., எங்க செல்ல பிள்ளைய்யா நீங்க உங்களை தெரியாமலா இருப்போம் என்று அந்த முதியவர் சொல்ல நெகிழ்ந்து போனார் திருநாவுக்கரசர்.
கூட வந்தவர்களோ அண்ணே உங்களை யாரும் மறக்கமாட்டாங்கண்ணே என்று சொல்லி அடுத்த இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
-இரா.பகத்சிங்