புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2014

விஜயகாந்த் புத்திசாலி என்று முதலமைச்சர் அவருக்கு ஒரு கனி கொடுத்தார் : நடிகர் செந்தில் பேச்சு
கரூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து நடிகர் செந்தில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக கரூர் வந்தார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம்,

’’கோவை, நீலகிரி, பொள்ளாச்சி ஆகிய 3 தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்து உள்ளேன். இந்த 3 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வுக்கு அதிக செல்வாக்கு உள்ளது.
முதல்–அமைச்சர் வழங்கி உள்ள திட்டங்கள் பற்றி மக்களுக்கு புரியும்படி எடுத்து சொல்லி வருகிறேன். இலங்கையில் தமிழ் மக்கள் அழிக்கப்பட்டு வருகிறார்கள். அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. மத்திய அரசின் பிடி நம் தமிழ்நாட்டில் இருக்க வேண்டும். மத்திய அரசு தமிழ் நாட்டிற்கு எதை கேட்டாலும் 'நகி' என்று சொல்கிறார்கள். 'நகி' என்ற வார்த்தையை மாற்ற வேண்டும்.
நாங்கள் சூரியனை எடுக்க சொன்னோமா, மாம்பழம், முரசு ஆகியவற்றை எடுக்க சொன்னோமா. இலைக்கு மட்டும் அவர்களுக்கு என்ன வந்தது. தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு கண்டிப்பாக ஓட்டு கிடையாது.
விஜயகாந்த் புத்திசாலி என்று, முதல்–அமைச்சர் அவருக்கு ஒரு கனி கொடுத்தார். அதை ஒழுங்காக பயன்படுத்திகொள்ள அவருக்கு தெரியவில்லை. ஆண்டவன்– மக்கள் புண்ணியத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்’’என்று தெரிவித்தார்.

ad

ad