மேல்மாகாண தமிழ்க் கல்வியை வளர்த்தெடுப்பதற்கு கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துங்கள்"
நேர்மையான முறையிலே தமிழ் கல்வி க்கு சேவை புரிந்துள்ளேன். அன்றாடம் எமது மக்களின் பல பிரச்சினைகளை தீர்த்து வைத்துள்ளேன். அநீதிகள் இடம்பெறும்பொழுது அதற்கு வெறுமனே
குரல் கொடுக்காமல் தட்டிக் கேட்டு நீதியை பெற்றுக் கொடுத்துள்ளேன். இம்முறை மேல்மாகாணசபை தேர்தல் மக்க ளுக்கு கிடைத்திருக்கும் ஒரு அரிய சந்தர்ப்பம் இதில் சிந்தித்து எமது வேட்பாளர்களுக்கு வாக்களித்தால் இதனை விட அதிகமாக சேவையினை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவி த்தார்.
குரல் கொடுக்காமல் தட்டிக் கேட்டு நீதியை பெற்றுக் கொடுத்துள்ளேன். இம்முறை மேல்மாகாணசபை தேர்தல் மக்க ளுக்கு கிடைத்திருக்கும் ஒரு அரிய சந்தர்ப்பம் இதில் சிந்தித்து எமது வேட்பாளர்களுக்கு வாக்களித்தால் இதனை விட அதிகமாக சேவையினை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவி த்தார்.
கொழும்பு வாழ் இறத்தோட்ட மக்கள் ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்று கையில், பல கோடி ரூபாய் செலவில் நான் தமிழ் கல்வியை அபி விருத்தி செய்துள்ளேன். மற்றவர்களை போலன்று எனது அபிவிருத்திகளை பட்டியலிட்டும் காட்டி யுள்ளேன். அவிசாவளை, களுத்துறை, தெணியகலை போன்ற பகுதிகளில் வாழும் பெருந்தோட்ட மக்கள் நடக்கக்கூட முடியாத பாதைகளை சுமார் மூன்று கோடி ரூபாய் செலவில் நிர்மாணித்து கொடுத்துள்ளேன். இங்கு வந்திருக்கும் குருசுவாமிமார்களுக்கு கடந்த வருட இறுதியில் இலவச இந்திய விசாவை நான் பெற்றுக் கொடுத்தது நன்றா கத் தெரியும். அது மட்டுமின்றி ஐயப்ப யாத்திரையை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக மாற்றிக் காட்டுவேன்.
தேர்தல் பிரச்சார வேலைப்பழு காரணமாக இன்றைய கூட்டத்திற்கு என்னால் பயன்பெற்ற பல குருசாமிமார்களை அழைக்க முடியாமல் இருந்ததையிட்டு மனம் வருந்துகின்றேன். இருந்தாலும் இங்கு வருகை தராத குருசாமிமார்களும் ஐயப்ப பக்தர்களும் அணி திரண்டு எனது மூன்று வேட்பா ளர்களுக்கு வாக்களிக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
பலர் பல விடயங்களை தேர்தல் நேரங்களில் சொல்லலாம். ஆனால் செய்ததை சொல்லி வாக்கு கேட்பவர்கள் நாங்களாகத் தான் இருக்கின்றோம். எனது தமிழ்க் கல்வி சேவைக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் முழுமையான சேவையினை எனக்கு வழங்க முடியாது போய்விடும்.
எதிர்க்கட்சிகளால் போராட்டங்களை மட்டுமே நடத்த முடியும். ஆனால் கொழும்பு மாவட்ட தமிழ்ப் பாடசாலைகளை அபிவிரு த்தி செய்ய முடியாது.
கொழும்பு மாவட்ட மக்களின் அன்றாட பிரச்சினைகளை அரசாங்க ஆதரவு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் எனக்கு மட் டும் தீர்த்து வைக்கக்கூடியதாக இருக்கின்றது. அதற்காக அரசாங்கத்தை தமிழ் மக்களு க்கு சார்பான அரசாங்கம் என்று என்றுமே கூறியதில்லை. ஜனாதிபதிக்கு மகுடம் சூட்டியதில்லை. இதை தேர்தல் காலங்களில் மட்டுமல்ல எப்பொழுதும் சொல்லி வருகின்றேன்.
எதிர்வரும் மேல்மாகாணசபைத் தேர்தலிலே கொழும்பு மாவட்டத்தில் மயில் சின் னத்திற்கும் எனது வேட்பாளர்களுக்கும் நீங் கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் உங்க ளது பிள்ளைகளின் பொன்னான எதிர்கால த்திற்கு அளிக்கும் வாக்குகளாகும். ஆகவே இவ் அரிய சந்தர்ப்பத்தை தவற விட்டு விடாதீர்கள்.