புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2014

தலைமையிடம் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டாம்: அழகிரியிடம் தொண்டர்கள் ஆரவாரம்

மதுரையில் தயா மகாலில் அழகிரி தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், தன்னையும் தனது ஆதரவாளர்களையும் திமுகவில் இருந்து வெளியேற்றியது
தவறு என்று பேசினார்.
அழகிரி மன்னிப்பு கேட்டால் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ள யோசிக்கலாம் என்று தலைவர் கூறியிருக்கிறாரே! நீங்கள் மன்னிப்பு கேட்பீர்களா என்று கேட்கிறார்கள்.
நாம் தவறு செய்யாத போது, நாம் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்? என்று தொண்டர்களிடம் கேள்வி எழுப்பினார் அழகிரி.
அதற்கு தொண்டர்கள், நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டாம் மன்னிப்பு கேட்க வேண்டாம் என்று கோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.
பின்னர் தொடர்ந்து பேசிய அவரது ஆதரவாளர்கள், திமுகவில் இருந்து நாம் வெளியேற வேண்டாம், நம்மைப் பிடிக்காதவர்கள் வெளியேறட்டும், என்று பேசினர்.

ad

ad