புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மார்., 2014



யாழில் பொன் அணிகளின் கிரிக்கட் போட்டியில் நடந்த கைகலப்பில் 23 வயது இளைஞன் பலி  

பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் புனித பத்திரிசியார் (சென். பற்றிக்ஸ்) கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி
அணிக்கும் இடையிலான 26ஆவது ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ண ஒருநாள் துடுப்பாட்டப் போட்டி நேற்று சனிக்கிழமை (15) வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பிக்நெல் மைதானத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த போது ரசிகர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் பலியாகியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது இரண்டு கல்லூரிகளின் பழைய மாணவர்களுக்கு இடையில் கருத்து மோதல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அதனையடுத்தே கைகலப்பு ஏற்பாட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் புனித பத்திரிசியார் (சென். பற்றிக்ஸ்) கல்லூரியின் பழைய மாணவனான செட்டியார் தெரு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜெயரட்னம் தர்ஷன் அமல்ராஜ் (வயது 23) என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

ad

ad