வவுனியாவில் இடம்பெற்ற படகு விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
வவுனியா,மாமடு குளத்தில் படகு செலுத்திக் கொண்டிருந்த இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் படகின் மிதவை உடைந்ததில் குளத்தில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ்
ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.
ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.
இன்று பிற்பகல் ஒரு மணியளவில் வவுனியா, மாமடு குளத்தில் படகொன்றில் அறுவர் பயணித்துள்ளனர்.
குளத்தின் இடை நடுவே படகு பயணித்துக்கொண்டிருந்த போது அந்த படகின் மிதவை உடைந்து படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன் போது படகில் பயணித்த அறுவரில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் ஒருவர் இளைஞர் என்பதுடன் ஏனைய இருவரும் பெண்களாவர்.
இதேவேளை உயிரிழந்த மூவரும் வவுனியா, குருமன்காடு பகுதியை சேர்ந்தவர்கள் என ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.