புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மார்., 2014

மீளமைப்பு விடயங்களை சரிவர செய்யாமையால்   சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்போம்!- கனடா
மறுசீரமைப்பு மற்றும் மனித உரிமை விடயங்களில் இலங்கை அரசாங்கம் தோல்வி அடைந்திருப்பதாக, கனடாவின் இராஜாங்க (வெளிவிவகாரம்) அமைச்சர் லின்னெ யலீச் தெரிவித்துள்ளார்.
25வது மனித உரிமைகள் மாநாட்டில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பில் சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகளால் தயாரிக்கப்பட்ட அறிக்கைகளுக்கு இலங்கை சரியான மறுமொழியை வழங்கவில்லை.
குற்றச்சாட்டுகளுக்கு சரியான தீர்வினை முன்வைக்கவில்லை.
இலங்கை அரசாங்கத்தின் உள்ளக பொறிமுறைகள் அனைத்தும் இரகசியமாகவும் பக்கச்சார்பாகவும் பூர்த்தி செய்யப்படாமலும் காணப்படுகின்றன.
இந்த நிலையில் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்படுவதற்கு கனடா முழுமையான ஆதரவை வழங்கும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

ad

ad