ஐ.தே.க.வை அமோக வெற்றி பெறச்செய்து இன ஒற்றுமையை உறுதிப்படுத்துங்கள் : ராம்
எதிர்வரும் 29ஆம் திகதி நேரகாலத்தோடு வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று எமது மக்கள் ஐக்கிய தேசியக்கட்சியின் வெற்றியை அமோக வெற்றியாக மாற்றி இன ஐக்கியத்தை உறுதிப்படுத்த வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும்இ முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் முதன்மை தமிழ் வேட்பாளருமான சி.வை.ராம் தெரிவித்துள்ளார்.
தேசிய அடையாள அட்டை இல்லாதோர் தமது புகைப்படத்தை கிராமசேவகரிடம் வழங்கி தமது அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்களிக்க முடியும். இதனை உடனடியாக மேற்கொண்டு உங்கள் வாக்குரிமையை பாதுகாத்துக்கொள்ளுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வேட்பாளர் ராம் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் அனைத்து இன மக்களையும் ஐக்கியப்படுத்திய கட்சி ஐக்கிய தேசியக்கட்சியாகும். எனவேஇ எமது கட்சியை இத் தேர்தலில் அமோக வெற்றி பெறச்செய்து இன ஒற்றுமையை உறுதிப்படுத்துங்கள்.
அத்தோடுஇ முதன்மை தமிழ் வேட்பாளராக ஐக்கிய தேசியக்கட்சியில் போட்டியிடும் எனக்கு எனது மக்கள் அமோகமான விருப்புவாக்குகளை வழங்கி வெற்றி பெறச்செய்ய வேண்டும். இந்த வெற்றி மூலம் மாகாண சபையில் எனக்கு உயர் பதவி கிடைக்கும். அப் பதவி எனக்குச் சொந்தமானதல்ல. அது மக்களுக்கு சொந்தமானது. இதன் மூலம் எனது மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் பேரம் பேசும் சக்தி கிடைக்கும்.
என் வெற்றி உங்கள் வெற்றியாகும். எனது மக்கள் எனது வெற்றியை உறுதி செய்துவிட்டனர். நான் பிரசாரங்களுக்கு இதை போன இடமெல்லாம் உணர்ந்தேன். ஐக்கிய தேசியக்கட்சியில் தமிழர் என்றால் அது ராம் தான் என மக்கள் மனதில் பதிந்து விட்டதை உணர்கிறேன். கடந்த காலங்களில் இரண்டு தடவைகள் என் மீது நம்பிக்கை வைத்து மக்கள் என்னை மாகாண சபைக்கு அனுப்பினார்கள்.
அந்த நம்பிக்கைக்கு ஒருபோதும் நான் குந்தகம் விளைவிக்கவில்லை. நான் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றியுள்ளேன். இதன் காரணமாகத்தான் கடந்த கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் எனது மகன் ஜோன் ராமுக்கு மக்கள் அமோகமான விருப்புவாக்குகளை வழங்கி இரண்டாம் இடத்திற்குத் தெரிவுசெய்தனர்.
இதுவொன்றே போதும்இ எனது மக்கள் சேவைக்கு கிடைத்த நற் சான்றிதழாகும். வாக்குரிமை மக்களின் ஜனநாயக உரிமையாகும். அதனை ஒவ்வொரு மனிதனும் பாவிக்கவேண்டும். எனவேஇ தேசிய அடையாள அட்டை இல்லாதோர் உடனடியாக தமது புகைப்படமொன்றை கிராமசேவகரிடம் வழங்கி உறுதிப்படுத்திக் கொள்வதன் மூலம் வாக்களிக்க முடியும்.
எனவேஇ தேசிய அடையாள அட்டை இல்லாதோர் உடனடியாக இதனை மேற்கொள்ளவும். தேர்தல் தினத்தன்று நேரகாலத்தோடு வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிக்க வேண்டும் என்றார்.