அழகிரியுடன் திமுகவினர் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது : அன்பழகன் எச்சரிக்கை
’’திமுகவிலிருந்து தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டுள்ள மு.க.அழகிரி, ஆதரவாளர்களுடன் சந்திப்பு என தொண்டர்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறார். எனவே, அவருடன் திமுகவினர் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது. அப்படி மீறி அவருடன் தொடர்பில் இருந்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் எச்சரித்துள்ளார்.