புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மார்., 2014

ஜெனிவாவில் இலங்கை அரசாங்கம்- எதிர்த்தரப்பினருக்கு இடையில் பலத்த வாக்குவாதம்
ஜெனிவாவில் நேற்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமர்வுக்கு புறம்பாக இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போது பலத்த வாக்குவாத நிலை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது
சர்வதேச பௌத்த நிதியம் ஏற்பாடு செய்திருந்த இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவாக ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலிலேயே இந்த வாக்குவாதம் ஏற்பட்டது.
அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பௌத்த மத குழுக்களின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றனர்.
அரசாங்கத்துக்கு ஆதரவாக காட்டப்பட்ட ஆவண படத்தின் போது வாக்குவாதம் ஏற்பட்டது.
மனித உரிமைகளுக்கான தமிழ் நிலையத்தின் பிரதிநிதி அரசாங்கத்தின் போர்க்குற்றம் தொடர்பில் கேள்வி எழுப்பினார்.
அவரின் வாதம், இலங்கையில் இருந்து சென்றுள்ள ஊடகவியலாளர் ஒருவர் உட்பட்ட அரசாங்க ஆதரவாளர்களால் குறுக்கீடு செய்யப்பட்ட போதே வாக்குவாதம் இரண்டு தரப்பினருக்கும் இடையில் தீவிரமானது.

ad

ad