புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2014

எல்லையற்ற மகிழ்ச்சிக்கு ஆளானேன்: தே.ஜ.கூ. மத்தியில் ஆட்சி அமைக்கும்: வைகோ பேட்டி
மதிமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, சனிக்கிழமை காலை சென்னையில் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, 


நடைபெறவுள்ள 16வது நாடாளுமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். நான் 1ம் தேதி இதே அரங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, நாடெங்கும் நரேந்திர மோடி அலை வீசுகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பாண்மை பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும். அதுமட்டுமல்ல தேர்தலுக்கு முன்போ அல்லது பின்போ, காங்கிரஸ் ஆதரவை பெற்றோ அல்லது காங்கிரசுக்கு ஆதரவு தந்தோ ஆட்சி அமைவதற்கு முனையக்கூடும் என எந்தக் கட்சிகளை நாங்கள் கருதுகிறோமோ அந்தக் கட்சிகளோடு எந்தக் காரணத்தை கொண்டும் நாங்கள் உடன்பாடு வைத்துக்கொள்ளமாட்டோம். பஞ்சாப்பில் அகாளிதளம் எப்படி பாஜகவோடு ஒரு உடன்பாடு வைத்துள்ளதோ, அந்த நிலைப்பாட்டை தமிழகத்தில் மதிமுக பின்பற்றும் என்று குறிப்பிட்டேன். 
இந்த உடன்பாடு வருவதற்கு பாடுபட்டவர் தமிழருவி மணியன். மேலும் அனைத்து தரப்பினரிடமும் பேசிய மிகப்பெரிய அணியாக வருவதற்கு பாடுபட்டவர் பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன். தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களும் இந்த கூட்டணியில் இணைய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தேன். அப்போதுதான் இந்த கூட்டணி வலுவாக இருக்கும். நாடு முழுவதும் நரேந்திர மோடி அலை வீசுகிற நேரத்தில் தமிழகத்தில் இந்த அணியும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அணி அமைய வேண்டும் என்று விரும்பினேன். அப்படிப்பட்ட அணி அமைந்து ராஜ்நாத் சிங் கடந்த 20ஆம் தேதி அறிவித்தபோது நான் எல்லையற்ற மகிழ்ச்சிக்கு ஆளானேன். இவ்வாறு கூறினார்

ad

ad