புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மார்., 2014

மயக்க மருந்து கொடுத்து இளம் பெண்ணை கற்பழித்த கணேசமூர்த்தி: கிளிநொச்சியில் பரபரப்பு 
மன உளைச்சலுக்குள்ளான தாயொருவர் அங்கு அமைந்துள்ள கிளிநொச்சி
பொது மருத்துவ மனையில் உளவளத்துறை தொடர்பான வைத்திய உதவிகளைப் பெற்று வந்துள்ளார். கடந்த 15.02.2014 அன்று வைத்திய உதவிக்காகச் சென்ற தாயிடம் – அவரது குடும்ப நிலவரங்களைக் கேட்டறிந்த உளவளத்துறைப் பணியாளர் திரு. கணேசமூர்த்தி அவர்கள் அந்தத் தாயின் குடும்பத்திற்கு வாழ்வாதாரத்துக்காக அவருடைய மகளுக்கு (இளம்பெண்) வைத்தியசாலையில
் ஒரு வேலை பெற்றுத் தருவதாகவும், அவருடைய கல்வித் தகமைகளுடன் நாளை 16.02.2014 அன்று மருத்துவ மனைக்குப் பக்கத்தில் உள்ள இசுலாமிய விடுதிக்குப் பக்கத்தில் தனது அலுவலகம் இருப்பதாகவும் அங்கு மகளை அனுப்பும் படியும் கூறியுள்ளார்

இவற்றை நம்பி தனது வாழ்வின் துயரங்கள் தீரப் போகின்றதே என்ற மகிழ்வோடு அந்தத் தாய் தனது மகளை 16.02.2014 அன்று காலையில் அனுப்பிவைத்துள்ளார். 16.02.2014 அன்று அந்த இளம் பெண் வைத்திய அதிகாரி கணேசமூர்த்தியை சந்திக்கச் சென்றுள்ளார். தனது அலுவலகம் இதுதான் என்று கூறிய கணேசமூர்த்தி, தனது வீட்டுக்குள் அப் பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார். சிறிது நேரம் உரையாடி விட்டு குளிர் பாணம் ஒன்றை குடிக்க கொடுத்துள்ளார். அதனைக் குடித்த பின்னர் தனக்கு மயக்கம் வருவதை அப் பெண் உணர்ந்துள்ளார். இருப்பினும் அவரால் எழுந்து அங்கிருந்து செல்ல முடியவில்லை. இதனைப் பயன்படுத்தி கணேசமூர்த்தி அப்பெண் மீது தனது காம இச்சையை தீர்த்துள்ளார். பாலியல் வல்லுறவுக்கும் உள்ளாக்கியுள்ளார்.

வேலைக்குச் சென்ற தனது மகள் நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை என்று பதறிய தாய், அப் பெண்ணின் காதலனை அழைத்து அவரை தேடும் படி கூறியுள்ளார். இந் நிலையில் மறு நாள் காலையிலேயே பாதிக்கப்பட்ட பெண் வீடு திரும்பியுள்ளார். நடந்த விபரீதத்தை கேட்டறிந்த தாயார், வைத்தியசாலை சென்று உயர் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். ஆனால் எவருமே கணேசமூர்த்திக்கு எதிராக விசாரணை நடத்த தயார் இல்லை.

தனது மகளுக்கு நடந்த கொடூரத்தை, தாயார் விபரமாக எழுதி, தமிழ் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் மேலும் நடைபெறாமல் தடுக்கப்படவேண்டும் என்று அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனை சகல தமிழ் ஊடங்களும் பிரசுரிக்க வேண்டும். காமூகன் கணேசமூர்த்தி மீது நிர்வாகம் மற்றும் பொலிசார் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று நாம் தாழ்மையாக வேண்டி நிற்கிறோம்.
மயக்க மருந்து கொடுத்து இளம் பெண்ணை கற்பழித்த கணேசமூர்த்தி: கிளிநொச்சியில் பரபரப்பு ! 
 3 March 2014  

மன உளைச்சலுக்குள்ளான தாயொருவர் அங்கு அமைந்துள்ள கிளிநொச்சி 
பொது மருத்துவ மனையில் உளவளத்துறை தொடர்பான வைத்திய உதவிகளைப் பெற்று வந்துள்ளார். கடந்த 15.02.2014 அன்று வைத்திய உதவிக்காகச் சென்ற தாயிடம் – அவரது குடும்ப நிலவரங்களைக் கேட்டறிந்த உளவளத்துறைப் பணியாளர் திரு. கணேசமூர்த்தி அவர்கள் அந்தத் தாயின் குடும்பத்திற்கு வாழ்வாதாரத்துக்காக அவருடைய மகளுக்கு (இளம்பெண்) வைத்தியசாலையில் ஒரு வேலை பெற்றுத் தருவதாகவும், அவருடைய கல்வித் தகமைகளுடன் நாளை 16.02.2014 அன்று மருத்துவ மனைக்குப் பக்கத்தில் உள்ள இசுலாமிய விடுதிக்குப் பக்கத்தில் தனது அலுவலகம் இருப்பதாகவும் அங்கு மகளை அனுப்பும் படியும் கூறியுள்ளார்

 இவற்றை நம்பி தனது வாழ்வின் துயரங்கள் தீரப் போகின்றதே என்ற மகிழ்வோடு அந்தத் தாய் தனது மகளை 16.02.2014 அன்று காலையில் அனுப்பிவைத்துள்ளார். 16.02.2014 அன்று அந்த இளம் பெண் வைத்திய அதிகாரி கணேசமூர்த்தியை சந்திக்கச் சென்றுள்ளார். தனது அலுவலகம் இதுதான் என்று கூறிய கணேசமூர்த்தி, தனது வீட்டுக்குள் அப் பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார். சிறிது நேரம் உரையாடி விட்டு குளிர் பாணம் ஒன்றை குடிக்க கொடுத்துள்ளார். அதனைக் குடித்த பின்னர் தனக்கு மயக்கம் வருவதை அப் பெண் உணர்ந்துள்ளார். இருப்பினும் அவரால் எழுந்து அங்கிருந்து செல்ல முடியவில்லை. இதனைப் பயன்படுத்தி கணேசமூர்த்தி அப்பெண் மீது தனது காம இச்சையை தீர்த்துள்ளார். பாலியல் வல்லுறவுக்கும் உள்ளாக்கியுள்ளார்.

வேலைக்குச் சென்ற தனது மகள் நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை என்று பதறிய தாய், அப் பெண்ணின் காதலனை அழைத்து அவரை தேடும் படி கூறியுள்ளார். இந் நிலையில் மறு நாள் காலையிலேயே பாதிக்கப்பட்ட பெண் வீடு திரும்பியுள்ளார். நடந்த விபரீதத்தை கேட்டறிந்த தாயார், வைத்தியசாலை சென்று உயர் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். ஆனால் எவருமே கணேசமூர்த்திக்கு எதிராக விசாரணை நடத்த தயார் இல்லை.

தனது மகளுக்கு நடந்த கொடூரத்தை, தாயார் விபரமாக எழுதி, தமிழ் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் மேலும் நடைபெறாமல் தடுக்கப்படவேண்டும் என்று அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனை சகல தமிழ் ஊடங்களும் பிரசுரிக்க வேண்டும். காமூகன் கணேசமூர்த்தி மீது நிர்வாகம் மற்றும் பொலிசார் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று நாம் தாழ்மையாக வேண்டி நிற்கிறோம்.

ad

ad