புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மார்., 2014

சிதம்பரம் பதவி விலக தேவையில்லை: கருணாநிதி
தேர்தல் வெற்றியை எதிர்த்து‌ தொடரப்பட்ட வழக்கில் மத்திய உள்துறை  அமைச்சர் ப.சிதம்பரம் பதவியை ராஜினாமா செய்ய தேவையில்லை என திமுக தலைவர்  கருணாநிதி கூறியுள்ளார்.


2009 ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், ப.சிதம்பரம்  சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு பெற்ற வெற்றியை எதிர்த்து‌ தொடரப்பட்ட வழக்கில், அவர் விசாரணையை  சந்திக்க வேண்டும் என்று நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டதை தொடர்ந்து,அவர் பதவி  விலக வேண்டும் என்று அதிமுக,பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி  வருகின்றன. 

இந்நிலையில் இன்று இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் கருணாநிதி,  
”தேர்தல் வெற்றி குறித்த வழக்கிற்காக மத்திய அமைச்சர் பதவியில் இருந்து அவர் விலக  தேவையில்லை.குற்றச்சாட்டு எழுப்பப்பட்ட உடனேயே ராஜினாமா செய்ய சொல்வது  நியாயமாகாது.விசாரணைக்கு முன்பே ராஜினாமா ‌என்றால் ஜனநாயகம் என்னவாகும்?”  என்று கூறினார்.

மேலும் சிதம்பரம் பதவிவிலக வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியதற்கு  பதில் அளித்த அவர்,”ஜெயலலிதா மீதும் ஏராளமான வழக்குகள் உள்ளன.அதற்காக அவர்  பதவி விலகினாரா?” என கேள்வியெழுப்பினார்.

ad

ad