புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மார்., 2014

 தனது ஆதரவாளர்களை ஒன்று திரட்டி திமுகவை வீழ்த்த மு.க. அழகிரி திட்டமிட்டு உள்ளார். இதன் பொருட்டு அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். தென்காசி தொகுதியில் போட்டியிடும் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு பாடம்
புகட்டுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
திமுக விலிருந்து நீக்கப்பட்டுள்ள அழகிரி மதுரையில் தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்டினார். பிறகு, நிருபர்களுக்கு பேட்டி அளித்த  அவர் திமுக வில் பணம் கொடுத்தவர்களுக்கே சீட்டு தரப்பட்டுள்ளது . உழைப்பிற்கு அங்கு மதிப்பில்லை, உள்கட்சி ஜனநாயகமும் இல்லை என்று குற்றம் சாட்டினார். 
இதற்கு மறுநாள் அன்பழகன் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அழகிரியுடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று அவர் எச்சரித்து இருந்தார். 
இதற்கு பதில் அளித்த அழகிரி இந்த பூச்சாண்டிக்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன் என்று பதிலடி கொடுத்தார். 
இந்த நிலையில் அவர் ராஜபாளையம் சென்றார். ராஜபாளையம் அருகே உள்ள கிழவிகுளத்தைச் சேர்ந்தவர் தமிழ்செல்வ குமார். இவரது மகளுக்கு காதணி விழா ராஜாபாளையம் திருமண மண்டபத்தில் நடந்தது. 
இந்த விழாவில் கலந்து கொண்ட அழகிரி பேசியதாவது _ சாத்தூர் ராமச்சந்திரன் ஒரு வியாபாரி, பாராளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் சரியான முறையில் தேர்வு செய்யப்படவில்லை. 
இந்தத் தேர்தலில் திமுக தோற்கும், அதன் பிறகு சாத்தூர் ராமச்சந்திரன் வேறு ஒருவரின் காலில் போய் விழுவார். தென்காசி தொகுதியில் போட்டியிடும் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு சரியான பாடம் புகட்டுவேன். 
அவர் இந்தத் தேர்தலில் தோல்வி அடைவார். அவர் மூனாவது இடத்திற்கு கூட வரமாட்டார். இவ்வாறு அவர் பேசினார். 
மேலும் பல ஊர்களுக்கு செல்ல இருக்கும் அழகிரி தனது ஆதரவாளர்களை திரட்டி திமுக வை வீழ்த்த அதிரடி திட்டம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

ad

ad