மு.க.அழகிரியுடன் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளர் சந்திப்பு
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை, ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அருள் அன்பரசு சந்தித்துப் பேசினார்.
சென்னை விமான நிலையத்தில் நடந்த இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அருள் அன்பரசு, மக்களவைத் தேர்தலில் தன்னை ஆதரிக்குமாறு மு.க.அழகிரியிடம் கேட்டதாக கூறினார். மேலும் மு.க.அழகிரி மீது திமுக எடுத்த நடவடிக்கை தற்காலிகமானதே என்றும் கூறினார்.