புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மார்., 2014

வாய்தா வாங்கும் ஜெயலலிதாவிற்கு அச்சம் என்பது மடமையடா என பாட என்ன தகுதி இருக்கிறது? மு.க.ஸ்டாலின்
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி பெருந்துறையில் திமுக வேட்பாளர் எம்.செந்தில்நாதனை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்
. அப்போது பேசிய அவர்,

ஜெயலலிதா பொதுக்கூட்டங்களுக்கு, வரும் மக்களுக்கு எதைஎதையோ கொடுத்து கூட்டி வருகின்றனர். அந்த கூட்டத்தில் அவர் ஒரு பாடலை பாடுகிறார். அந்த பாடல் கண்ணதாசன் வரிகளில் “மன்னாதி மன்னன்” படத்தில் நடிக்கும் எம்.ஜி.ஆர். வாயசைத்த பாடல்.
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு, நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா.
இந்த பாடலை பாடுகிறார் ஜெயலலிதா

இந்தப் பாடலை பாட என்ன தகுதி இருக்கிறது ஜெயலலிதாவிற்கு. பதினெட்டு வருடம் சொத்து குவிப்பு வழக்கில் வாய்தா வாங்கும் ஜெயலலிதாவிற்கு இப்பாடலை பாட என்ன தகுதி இருக்கிறது. இவ்வாறு பேசினார்.

ad

ad