புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஏப்., 2014



தொப்புள் கொடி உறவுகள் இருந்தும் 1 லட்சத்து 75 ஆயிரம் பேர் சிங்கள கொடியவர்களால் கொல்லப்பட்ட போது காப்பாற்ற வேண்டிய காங்கிரஸ், சிங்கள அரசுக்கு நிதி உதவி, போர் கருவிகள் கொடுத்து தமிழர்களை காட்டியும் கொடுத்தது. அதற்கு துணை நின்றது தி.மு.க! சீமான் கேள்வி
பவானியில் அந்தியூர் பிரிவில் உள்ள பாவடி திடலில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது.  கட்சி தலைவர் சீமான் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். 

அப்போது அவர்,   ‘’தமிழர்களுக்கு துரோகம் செய்தவர்கள் எல்லாம் இன்று தமிழர்களிடம் ஓட்டு கேட்டு வருகிறார்கள். காங்கிரஸ், பா.ஜனதா, தே.மு.தி.க. இவர்களுக்கு நாம் எதற்காக ஓட்டு போட வேண்டும்? மக்கள் சிந்திக்க வேண்டும்.
இந்த கட்சியினர் 8 கோடி தமிழர்களின் பிரச்சினைக்காக எந்த காலத்திலாவது இறங்கி போராடியது உண்டா?
காவிரி நீர் கர்நாடகாவில் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. காவிரி ஆணையமும் உச்ச நீதி மன்றமும் ஆணையிட்ட பின்னும் கர்நாடகா தண்ணீர் தர மறுக்கிறது. தீர்க்கப்படாத காவிரி சிக்கல் உழவர்களின் தற்கொலையில் வந்து நிற்கிறது. அட்டப்பாடியில் கேரள அரசும் அணை கட்ட தொடங்கி விட்டது. ஒரு சொட்டு நீருக்கு வழி ஏற்படுத்தி தராத கட்சிகள் காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள்.
கூப்பிடும் தூரத்தில் நம் தொப்புள் கொடி உறவுகள் இருந்தும் 1 லட்சத்து 75 ஆயிரம் பேர் சிங்கள கொடியவர்களால் கொல்லப்பட்ட போது காப்பாற்ற வேண்டிய காங்கிரஸ், சிங்கள அரசுக்கு நிதி உதவி, போர் கருவிகள் கொடுத்து தமிழர்களை காட்டியும் கொடுத்தது. அதற்கு துணை நின்றது தி.மு.க! வேடிக்கை பார்த்தது பா.ஜ.கட்சி!
இப்படிப்பட்டவர்களை தேர்தலில் புறக்கணியுங்கள். ஓட்டுக்கள் மூலம் அவர்களுக்கு சவுக்கடி கொடுங்கள்’’என்று கூறினார்.

ad

ad