புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஏப்., 2014

தோல்வியை எளிதில் மறக்க முடியாது- யுவராஜ்சிங் 
உலகக்கிண்ண 20-20 போட்டியில் இலங்கை அணியிடம் கண்ட தோல்வியை எளிதில் மறக்க முடியாது என இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ்சிங் தெரிவித்துள்ளார்.


அண்மையில் வங்களதேஷில் நடந்த 20-20 உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையிடம் தோல்வியுற்று கிண்ணத்தை இழந்தது.

இந்த போட்டியில் யுவராஜ்சிங் 21 பந்துகளில் 11 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்து ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார்.

டி20 உலகக்கிண்ண இறுதிப்போட்டி தோல்வி குறித்து மவுனம் சாதித்து வந்த யுவராஜ்சிங், பெங்களூர் ரொயல் சேலஞ்சர்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு யுவராஜ்சிங் அளித்த பேட்டியில் கூறியதாவது,

இந்திய அணியின் ஆட்டம் டி20 உலகக்கிண்ணப் போட்டியில் சிறப்பாக இருந்தது. ஆனால் இறுதிப்போட்டியில் ஆட்டம் நாங்கள் திட்டமிட்டப்படி நடக்கவில்லை.

உலகக் கோப்பையை நெருங்கி வந்து விட்டு இறுதிப்போட்டியில் தோல்வி காண்பது என்பது எப்பொழுதும் வருத்தத்தை அளிக்க தான் செய்யும். விளையாட்டு வீரர்கள் இது போன்ற உணர்ச்சிகளில் இருந்து விரைவில் மீண்டு வந்து அடுத்த சவால்களை சந்திக்க தயாராக வேண்டியது அவசியமானதாகும்.

வெற்றியையும், தோல்வியையும் ஒரே மாதிரியாக கையாள வேண்டும் என்று இளம் வயதில் எனது பயிற்சியாளர் கூறுவார். அவர் அப்போது சொன்னதை தான் கடைப்பிடிக்க விரும்புகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad