புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஏப்., 2014

மகளிர் உலகக்கோப்பையிலும் மே இ தீவுகள் தோல்வி.இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா தகுதி
மகளிர் உலகக்கோப்பை 20 ஓவர் கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா தகுதி பெற்றுள்ளது.
 
மகளிர் உலகக்கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி போட்டி மிர்பூரில் இன்று இடம்பெற்றது. இந்த போட்டியில், ஆஸ்திரேலிய அணியும், மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதின.
 
முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் அதையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.
 
இதையடுத்து, மகளிர் உலகக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட்டின் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலிய அணி தகுதி பெற்றுள்ளது.
 
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டின் 2 ஆவது அரையிறுதி போட்டி நாளை (4ஆம் திகதி) இடம்பெறுகிறது. இதில் இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும் மோதுகின்றன. 
 
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் இறுதிப்போட்டியாக 6ஆம் திகதி ஆஸ்திரேலிய அணி மோதவுள்ளது.

ad

ad