புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஏப்., 2014

காங்கிரஸ் கட்சி 20 இடங்களில் தமிழகத்தில் வெற்றி பெறும்: சுதர்சன நாச்சியப்பன் பேச்சு
சென்னையில் வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன்,
காங்கிரஸ் கட்சி தியாகத்தின் அடிப்படையில்
வளர்ந்த கட்சி. தற்போதைய தேர்தலில் அது குழந்தை போன்று தேர்தலை சந்திக்கிறது. எதிர்பாராத முடிவுகள் தேர்தலில் கிடைக்கும். காங்கிரஸ் அரசின் 10 ஆண்டுகால சாதனைகளை கூறி வாக்கு கேட்போம்.

இந்திய தேர்தல் கமிஷன் பணிகளில் நாங்கள் முழு திருப்தி அடைகிறோம். முதல்வர் தேர்தல் கமிஷனை குற்றம் சாடுவது அவரது பாணி. தற்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சி 20 இடங்களில் தமிழகத்தில் வெற்றி பெறும். தமிழக மீனவர்கள் பிரச்சனையில் தமிழக காவல்துறைக்கு முழு சுதந்திரம் கொத்தாலே பிரச்சனை ஏற்படாது. அவர்களுக்கு எல்லாவித உதவியும் மத்திய அரசு செய்துள்ளது.
இலங்கை பிரச்சனை தேர்தலில் எதிரொலிக்காது. தமிழகத்தில் தங்கியிருந்த அகதிகளில் 70 ஆயிரம் பேரை காணவில்லை. இதற்கெல்லாம் அரசு பதில் சொல்ல வேண்டும் என்றார்.

ad

ad