சிதம்பரம்: தலித் மக்கள் மீது தாக்குதல் - 25 பேர் கைது
சிதம்பரம் அருகே உள்ள வடக்குமாங்குடி கிராமத்தில் தேர்தலில் வாக்கு சேகரிக்கும் போது இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட முன்விரோதம் தொடர்பாக வியாழக்கிழமை தேர்தல் முடிவுற்றவுடன் இரவு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் ஒன்று உருட்டு கட்டை
இச்சம்பவம் தொடர்பாக சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து வெள்ளிக்கிழமை மாலை வடக்குமாங்குடியைச் சேர்ந்த பத்மநாபன் (45), கஜேந்திரன் (40), கதிரவன் (30), விஜயன் (19), ராம்குமார் (18), கலைச்செல்வன் (18) உள்ளிட்ட 25 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.