26 நாடுகளும், 3 அரச சார்பற்ற நிறுவனங்களும் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டன!
26 நாடுகளும், மூன்று அரச சார்பற்ற நிறுவனங்களும் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டன என ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான இலங்கைக் காரியாலயம் அறிவித்துள்ளது.
மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது குறித்த நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டன என குறிப்பிட்டுள்ளது.
சீனா, ரஸ்யா, பாகிஸ்தான் மற்றும் கியூபா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டன.
நாடுகளுக்கு மேலதிகமாக மூன்று அரச சார்பற்ற நிறுவனங்களும் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டுள்ளன.