கோட்டையில் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மூவர் வைத்தியசாலையில்
கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக சாகும்வரையான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ரயில்வே உழியர்களில் மூவா இன்று மதியம் 2.00 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது அங்கீகரிக்கப்பட்ட ரயில்வே திணைக்கள தொழினுட்பவியல் உதவியாளர்கள் குறைக்கப்பட்டமை உள்ளிட்ட சில விடயங்களை முன்வைத்து போராட்டத்தில் நேற்று காலை முதல் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் போராட்டத்தில் கலந்துகொண்ட இலங்கை சுதந்திர ரயில் சேவையாளர் சங்கத்தின் பொது செயலாளர் நதீர மனோஸ் உட்பட மேலும் இருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே சேவையாளர் தொழிற்சங்க ஒன்றியம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.