கல்விக்கு கைகொடுப்போம்\' நிகழ்ச்சித்திட்டம்
. சித்தார்த்தன் கலந்து சிறப்பிப்பு
'கல்விக்கு கைகொடுப்போம்' நிகழ்ச்சித்திட்டம் ஒன்று காரைநகர் சிவகாமி அம்மன் ஆலயத்தில் நேற்று பிரதேச சபை தவிசாளர் திரு ஆனைமுகன் தலைமையில் இடம்பெற்றது.
மேலும் இந் நிகழ்வில் ஜேர்மனியில் உள்ள செல்வதுரை ஜெகன்நாதன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஜேர்மன் வாழ்புலம் பெயர் உறவுகளால் கல்விச் செயற்பாடுகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக வடமாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் திருமதி சித்தார்த்தன் ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக வலிமேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்களான க.சபாநாயகம்,ச.சசிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.